ஆன்ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு 131. | அளபெடைப் பெயரே அளபெடை யியல. |
னகர ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். னகார இறுதி அளபெடைப் பெயராயின் 1மேற்சொல்லப்பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகி விளி ஏற்கும், எ - று. எ - டு. கிழாஅன், கோஒன் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (17) னகர ஈற்று முறைப்பெயர் விளி ஏற்குமாறு 132. | முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே. |
னகார ஈற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். னகார ஈற்றுள் முறைமை குறித்த பெயர் ஏகாரத்தோடு விளி ஏற்கும், எ - று. எ - டு. மகன் என்பது மகனே என வரும். ஒப்பின் முடித்தல் என்பதனான் முறைமை சுட்டாத மகன் என்னும் பெயரும் ஏவொடு சிவணும் என்று கொள்க. 2“பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே” என வரும். 3சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅ மகாஅ-ஈன்றாட் கொருபெண் இவள் என ஆகாரமாகியும் வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பிற பெயர்க்கண்ணும் ஏவொடு வருதல் கொள்ளப்படும். | 4கூந்தன்மா வூர்ந்து குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லியஞான் றுண்டால்--யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. |
எனவும், கோன் என்பது கோனே எனவும் வரும். இவை செய்யுள் மருங்கினும் என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளினும் அமையும். (18) னகர ஈற்றுள் விளி ஏலாதன 133. | தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. |
1. 121ஆம் நூற்பா. 2. குறுந். 156. 3. பரி. 8-ஆம் பாடல். 4. முத்தொள்ளாயிரம்.
|