ளகர வீற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். சுட்டெழுத்தை முதலாக உடைய பெயரும், வினாவானாகிய பெயரும்1 மேற்சொல்லியவாறு போல் விளி ஏலா, எ - று. எ - டு. அவள், இவள் உவள், அத்தன்மையள், அத்தன்மையாள்; யாவள் என்பன விளி ஏலா என்றவாறு. (30) லகார, ளகார ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு 145. | அளபெடைப் பெயரே அளபெடை யியல. |
லகார ளகார ஈறுகள் அளபெடைக்கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். லகார, ளகார ஈற்று அளபெடைப்பெயர் 2மேற் சொல்லப்பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகும். எ - று. எ - டு. வலம்புரித் தடக்கை மாஅல்: மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள் என வரும். (31) அஃறிணை விரவுப் பெயர் விளி ஏற்குமாறு 146. | கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. |
அஃறிணைப் பொருள் உணரவரும் விரவுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட ஈற்றினை யுடையவாகிய அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப் பெயர் சொல்லப்பட்ட நெறியவாம் விளிக்குங் காலத்து, எ - று. எ - டு. சாத்தன், சாத்தா; சாத்தி, சாத்தீ; குருடன், குருடா; குருடி, குருடீ எனவரும். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (32) அஃறிணைப் பெயர் விளி ஏற்குமாறு 147. | புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே. |
1. 133 ஆம் நூற்பா. 2. 121 ஆம் நூற்பா.
|