பக்கம் எண் :

[பெயரியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்91

91

ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும்
1
அம்மூ வுருபின தோன்ற லாறே.

நிறுத்த முறையானே பெயர்ச்சொற் பாகுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் பெயர் என்று சொல்லப் படுபவை ஆராயுங் காலத்து உயர்திணைப் பொருட்கே உரிமையவாகியும், அஃறிணைப் பொருட்கே உரிமையவாகியும், அவ் விரு திணைக்கும் ஒத்த உரிமைய வாகியும் அம்மூன்று வடிவினையுடைய தோன்றுதற்கண், எ - று.

எனவே பெயர்ச் சொல் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என மூவகைப்படும் என்பதூஉம், அது அவ்விருதிணைப் பொருள்களையும் உணர்த்தும் என்பதூஉம் பெறுதும், உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். 

(6)

பெயர்ச் சொற்கள் பாலுணர்த்துமாறு

157.

இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும்
உரியவை யுரிய பெயர்வயி னான.

இதுவும் பெயர்ச்சொற்கெல்லாம் பொது இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று

இ - ள். இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் சொற்கும் பெயர்வயின் உரியவை உரியவாம், எ - று.

இதனாற் சொல்லியது முன் எடுத்து ஓதப்படுகின்ற பெயர்களைப் பால் விரித்து ஓதுகின்றிலம்: பெயர்களுள் அவ்வப்பாற்குரிய பெயரைப் பாலறி கிளவியாகக் கொள்க என்றவாறு. இதனானே பெயர்ச்சொற்கு ஈறு வரையறுக்கப்படாது என்பதூஉம் கூறினாராம். 

(7)

உயர்திணைப் பெயர்கள்

158.

அவ்வழி,
அவன் இவன் உவனென வரூஉம் பெயரும்
அவள் இவள் உவளென வரூஉம் பெயரும்
அவர் இவர் உவரென வரூஉம் பெயரும்
யான் யாம் நாமென வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவ ரென்னும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த உயர்திணைப் பெயரே.


1. ‘அம்மூவுருவின’ என்பது நச்சினார்க்கினியர் பாடம்.