98தொல்காப்பியம்[பெயரியல்]

98

உயர்திணைப் பொருண்மேல் விரவி வரும் இயற் பெயர் ஒருமையும் பன்மையும் தோன்ற
நிற்றலின் வேறோதப்பட்டது. இவை பொருளும், உறுப்பும், பண்பும், தொழிலும், இடமும்,
காலமும் பற்றி வரும்.

எ - டு. ஆ, தெங்கு என்பன பொருள். இலை, பூ, என்பன உறுப்பு. கருமை, வட்டம் என்பன பண்பு. உண்டல், ஓடல் என்பன தொழில். அகம், புறம் என்பன இடம். யாண்டு, திங்கள் என்பன காலம். ஆ வந்தது என்றவழி ஒன்று என்பதூஉம், வந்தன என்றவழிப் பல என்பதூஉம் உணர்த்தியவாறும், இவ்விரு ஈற்றுக்கும் பொதுவாகி நின்றவாறும் கண்டு கொள்க. பிறவும் அன்ன.

(17)

விரவுப் பெயர் பாலுணருமாறு

168.

இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமையின்
திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே.

 நிறுத்த முறையானே இருதிணைக்கும் உரிய பெயர்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உயர்திணைப் பெயர்ச் சொல், அஃறிணைப் பெயர்ச் சொல் என இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையினின்றும் திரிந்து பொருள் வேறுபடூஉம் எல்லாப் பெயரும் ஆராயுங் காலத்துத் தத்தமக் கேற்ற வினையோடே கூடி யல்லது பால் விளங்குதல் இல, 
எ - று.

எ - டு. பால் எனவே திணையும் அடங்கும். அவையாவன இயற் பெயர் முதலாக முன் எடுத்து ஓதுகின்ற பெயர். அவற்றுள், சாத்தன் என்னும் பெயர் உயர்திணை ஆண்பாற்கும் அஃறிணை ஆண்பாற்கும் இடுகுறியாகி வழங்கு மாதலின், அது வந்தான் என்பதனோடு தொடர்பு பட்டுழி உயர்திணை எனவும், வந்தது என்பதனோடு தொடர்பு பட்டுழி அஃறிணை எனவும் நின்றவாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. இச் சூத்திரம் எதிரது நோக்கிற்று.

(18)

மேலதற் கோர் புறநடை

169.

நிகழூஉ நின்ற1 பலர்வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரபின் வினைவயி னான.

மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். தத்தம் மரபினாற் பால் உணர வரூஉம் வினைச் சொல்லானன்றி நிகழ்காலத்தை உணர நின்ற பலரை வரைந்த


1. பால்வரை கிளவி எனப் பாடங் கொள்வர் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும்.