144தொல்காப்பியம்[இடையியல்]

144

எதிர்மறையாவது தன்னாற் சொல்லப்பட்ட பொருளின் மாறுபட்டு வந்தது. உண்ணேனோ, வாரேனோ என்றவழி உண்பல், வருவல் என்னும் பொருள்பட்டது.

ஒழியிசையாவது தன்னாற்சொல்லப்பட்ட பொருளன்றி மற்றொரு பொருளுங் கொள்ள நிற்பது. செய்கையோ செய்தான் என்ற வழிப், பின்பும் இவ்வாறு செய்திலன் என்னும் பொருளுங் குறித்து நின்றவாறு கண்டுகொள்க.

தெரிநிலை என்பது ஒருபொருளை ஆராயும் நிலைமைக்கண் வருவது. திருமகளோ அல்லள், நாமகளோ வல்லள், இவள் யாராகும் எனவரும்.

சிறப்பென்பது பொருளின் உயர்வு குறித்து நிற்கும், கானகநாடனை நீயோஒ பெரும எனவரும். அஃதேல் எழுத்ததிகாரத்து 1ஓகாரவீற்றுள் ஐயமென்றும் ஓர் ஓகாரம் ஓதினாராலெனின், அது தெரிநிலைக்கண் அடங்கும் என்பதூஉமொன்று.

வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஆண்டு மாறுகொள் எச்சமும், வினாவும், ஐயமும் என ஓதப்பட்டவற்றுள் வாராததுங் கொள்ளப்படும். ஒருவனோ, ஒருத்தியோ தோன்றுகின்றார் என வரும்.

(8)

ஏ என்னும் இடைச்சொல்லின் பொருள்

254.

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே.

இதுவும் அது

இ - ள். தேற்றம் முதலாக ஐந்து பகுதிய: ஏகார இடைச் சொல், எ - று.

எ - டு. அவனேஎ செய்தான் என்பது துணிவுகுறித்த வழித், தேற்றேகாரமாம், ஈண்டு அளபெடைவரும். வினாக்குறித்தவழி, வினாவே காரமாம். யானே வந்தேன் என்றவழிப், பிறர் கூடலின்றியே எனப் பொருள் படுதலிற் பிரிநிலையேகாரமாம். எண்ணுக்குறித்து வரும். 2(சொல்லே குறிப்பே ஆயிரண்டெச்சம்...............) ஈற்றசை என்பது சொல்லின் இறுதிக்கண் அசைநிலையாகி நிற்பது. 3கடல்போற்றோன்றல காடிறங்தோரே எனவரும்.

அஃதேல், எழுத்ததிகாரத்துள் 4மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும் என ஏகார ஈறு ஓதினார், அவற்றுள் மாறுகொள் எச்சம் ஈண்டு ஓதாதது என்னை யெனின், 5வன்புற வரூஉம் வினைவுடை வினைச்சொல், எதிர்மறுத்து உணர்த்துதற் குரிமையுமுடைத்தே என்றாராகலின்


1. சூ. 290.

2. இத்தொடர் சிதைந்துளது.

3. அகம். 1.

4. சூ. 275.

5. வினை சூ. 47.