எ - டு. அவர் வந்தார் போலும். இதனுள் வந்தார் எனத் துணிந்த வழி வருதலின், அசைநிலையாயிற்று. அசைநிலைச் சொற்கள் 275. | யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் 1ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி. |
இதுவும் அது. இ - ள். யா முதலாகச் சொல்லப்பட்ட ஏழு சொல்லும் அசைநிலைக் கிளவியாம், எ - று. எ - டு. யா - “தோழியா சுவர்க்கம் போக்கிங்கென்”. கா - “புற நிழற் பட்டாளோ வவளிவட் காண்டிகா”. பிற - “தான் பிற-வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி”. (புறம். 140) பிறக்கு - “நசைபிறக் கொழிய”. அரோ-“நோதக, விருங்குயி லாலுமரோ”. (கலி 33.) போ-“பிரியின் வாழா தென்போ தெய்ய”. மாது-“விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே.” (நற்-178) என வரும். (30) பிரிவில் அசைநிலைகள் 276. | ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை. |
இதுவும் அது. இ - ள். இவை மூன்று சொல்லும் பிரிவின்றி இரட்டித்த விடத்து அசைநிலையாம் என்றவாறு. எ - டு. ஆக ஆக, ஆகல் ஆகல், என்பதென்பது எனவரும். (31) ஒளகாரம் அல்லாத பிற உயிரெழுத்துக்கள் பொருள்படுமாறு 277. | ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே ஆயியல் நிலையுங் காலத் தானும் அளபெடை யின்றித் 2தனிவருங் காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். |
1. ஆவேழ் சொல்லும் என்பதும் பாடம். 2. ‘தான்வரும்’ என்பதும் பாடம். பிற உரையாசிரியர்கள் இப்பாடமே கொண்டனர்.
|