176தொல்காப்பியம்[உரியியல்]

176

இ - ள். கருவி என்னுஞ் சொல் தொகுதி என்னும் பொருள்படும், எ - று.

எ - டு.‘கருவி வானம்’ (புறம்-159).

(58)

கமம் என்பதன் பொருள்

351.கமம்நிறைந் தியலும்.

இ - ள். கமம் என்னுஞ் சொல் நிறைந்து என்பதனோடு இயலும், எ - று.

எ - டு. ‘கமஞ்சூல் மாமழை’ (அகம்-43) (குறுந்-158) (முருகாற்-7)

(59)

அரி என்பதன் பொருள்

352.அரியே ஐம்மை.

இ - ள். அரி யென்னுஞ் சொல் ஐது என்னும் பொருள்படும், எ - று.

எ - டு. ‘அரிமயிர் திரண்முன்கை’ (புறம்-11)

(60)

கவவு என்பதன் பொருள்

351.கவவகத் திடுமே.

இ - ள். கவவு என்னுஞ் சொல் அகத்திடுதல் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே’ (புறம்-19)

(61)

துவைத்தல், சிலைத்தல், இரங்கல், இயம்பல் என்பவற்றின் பொருள்

354.

துவைத்தலும் சிலைத்தலும் 1இரங்கலும் இயம்பலும்
இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர்.

இ - ள். துவைத்தல் என்னுஞ் சொல்லும், சிலைத்தல் என்னுஞ் சொல்லும், இரங்கல் என்னுஞ் சொல்லும், இயம்பல் என்னுஞ் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய சொல், எ - று.

எ - டு. ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு-315). ‘ஏறிரங் கிருளிடை’ (கலி-46,) ‘கடிமரந் தடியு மோசை தன்னூர்-நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம்-36)

(62)

இரங்கல் என்பதற்கு மேலும் ஒரு பொருள்

355.அவற்றுள்,
இரங்கல் கழிந்த பொருட்டு மாகும்.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் இரங்கல் என்பது கழிந்தது என்னும் பொருளையும் உடைத்தாகும், எ - று.

எ - டு. ‘செய்திரங் காவினை’ (புறம்-10.)

(63)


1. இயம்பலும் இரங்கலும் என்பது ஏனை உரையாளர் பாடம்.