இலம்பாடு, ஒற்கம் என்பவற்றின் பொருள் 356. | இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை. |
இ - ள். இலம்பாடு என்னுஞ் சொல்லும், ஒற்கம் என்னுஞ் சொல்லும் வறுமை யென்னுஞ் சொல்லின் பொருள்படும், எ - று. எ - டு. இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய (மலைபடு-576). ஒக்க லொற்கஞ் சொலிய (புறம்-327). (64) ஞெமிர்தல், பாய்தல் என்பவற்றின் பொருள் 357. | ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள். |
இ - ள். ஞெமிர்தல் என்னுஞ் சொல்லும், பாய்தல் என்னுஞ் சொல்லும் பரத்தல் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்-90). பாய்புனல். (65) கவர்பு என்பதன் பொருள் 358. | 1கவர்புவிருப் பாகும். |
இ - ள். கவர்பு என்னுஞ் சொல் விருப்பு என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. கவர் நடைப்புரவி (அகம்-130). (66) சேர் என்பதன் பொருள் இ - ள். சேர் என்னுஞ் சொல் திரட்சி யென்பதன் பொருள்படும், எ - று. எ - டு. சேர்ந்துசெறி குறங்கு (நற்-170). (67) வியல் என்பதன் பொருள் 360. | வியலென் கிளவி யகலப் பொருட்டே. |
இ - ள். வியல் என்னுஞ் சொல் அகலம் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. வியலுலகம். (68) பே, நாம், உரும் என்பவற்றின் பொருள் 361. | பேஎ நாம் உருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள. |
1. ‘கவர்வு’ எனப் பாடம் கொள்வர் ஏனைய உரையாசிரியர்கள்.
|