செய்யுள் விகாரம் 399. | அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர். |
மேற்சொல்லப்பட்ட நால்வகைச் சொல்லும் செய்யுளகத்து விகாரப்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அந்நாற்சொல்லும் ஆவன:--இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும், எ - று. தொடுக்குங் காலை யென்பது ஒன்றோடொன்று தொடர்புபடச் செய்யுளாக்குங் காலத்து. எ - று. வலிக்கும்வழி வலித்த லென்பது மெல்லெழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி வல்லெழுத்தாகத் தொடுத்தல். மெலிக்கும்வழிமெலித்தல் என்பது வல்லெழுத்தினை மெல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும்வழி மெல்லெழுத்தாகத் தொடுத்தல். விரிக்கும்வழி விரித்தல் என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்மேல் ஒன்றும் இரண்டும் எழுத்து விரிக்கவேண்டும் வழி விரித்துத் தொடுத்தல். தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்கண் ஒன்றும் இரண்டும் எழுத்துத் தொகுத்துத் தொடுக்கவேண்டும் வழித் தொகுத்துத் தொடுத்தல். நீட்டும் வழி நீட்டலென்பது குற்றெழுத்தாகி நின்று பொருள் படுஞ் சொல்லை நெட்டெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி நெட்டெழுத்தாகத் தொடுத்தல், குறுக்கும் வழிக் குறுக்கலாவது நெட்டெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொற்களைக் குற்றெழுத்தாகத் தொடுக்கவேண்டும் வழிக் குற்றெழுத்தாகத் தொடுத்தல். நாட்டல் வலிய என்மனார் புலவர் என்பது இவ்வாறாகச் செய்யுட் கண் வைத்தல் வலியுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர், எ - று, குற்றமில, எ - று. விகாரப்படாமற் றொடுத்தல் சொல்லாமல் முடிந்ததாம். எ - டு. | “தத்தங் கிளவி தம்மகப் பட்ட | | முத்தை வரூஉங் காலந் தோன்றின் | | ஒத்த தென்ப ஏயென் சாரியை’ | | (எழுத்-164.) |
என்றவழி, முந்தை என்பது முத்தையென வல்லெழுத்தாயிற்று. “தண்டை யினக்கிளி கடிவோள்” என்பதனுள் தட்டை எனற்பாலது தண்டையென மெல்லெழுத்தாயிற்று. 1”தண்ணந்துறைவர் தகவிலர்” என்றவழித், தண் என்பது தண்ணம் என விரிந்து நின்றது. 2“வேண்டார்
1,2. மயிலை நா-பக்கம் 79. காண்க.
|