30தொல்காப்பியம்[கிளவியாக்கம்]

30

மாவும் மருதும் அவை என்றவழி மாமரமென்பது அறியப்பட்டது. மாவும் புள்ளும் என்றவழி விலங்கென்பது அறியப்பட்டது. இவை இனம்.

இப்பொழிலகத்து நூறு மாவுள என்றவழி மரம் என்பது அறியப்பட்டது. இப்போர்க்களத்து நூறு மாவுள என்றவழி விலங் கென்பது அறியப்பட்டது. இவை சார்பு.

பொதுமை யுணர்த்தும் பலபொரு ளொருசொல் இனமும் சார்பும் பற்றி வருவன வந்தவழிக் கண்டு கொள்க.

(51)

மேலதற்கோர் புறநடை.

52. 1ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்.

மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினைவேறுபடும் பல பொருள் ஒரு சொல், வேற்று வினை கொண்டு முடிதலேயன்றி இருபொருட்கும் பொருந்தின ஒருவினை கொண்டு முடியின், பிறிதொரு சொல்லோடு ஒன்றிப் பொருள் தோன்றும், எ - று.

பிறிதொரு சொல்லென்பது எஞ்சி நின்றது.

எ - டு. மாவீழ்ந்தது என்றவழி இன்ன மாவென்பது அறியாலாகாமையின், யானை முறித்தலால் வீழ்ந்தது என்றவழி மரம் என்பதூஉம், அம்பு படுதலான் வீழ்ந்தது என்றவழி விலங்கு என்பதூஉம் உணர்த்தியவாறு கண்டுகொள்க.

(52)

வினைவேறுபடாஅப் பலபொருள் ஒருசொல்

53.

வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்

இது வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் பொருள்
உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வினை வேறு படாத பல பொருள் ஒரு சொல் பொருள் உணருங்கால் எடுத்துக்கூறல் வேண்டும், எ - று.

எ - டு. சேவல், பெடை என்பன வினையால் வேறுபடாமையால் அன்னச் சேவல், குயிற் சேவல், அன்னப் பெடை, குயிற் பெடை என எடுத்துக் கூறப் பொருள் விளங்கினவாறு கண்டு கொள்க.

(53)

மேலதற்கோர் புறநடை

54. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி.


1. 51, 52-ஆம் சூத்திரங்களைச் சேனாவரையர் ஒன்றாக்குவார்.