[வேற்றுமையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்47

47

“கணிகொண் டலர்ந்த நறவேங்கையோடுங் கமழ்கின்ற காந்தளிதழா
லணிகொண்ட”

(சூளா. அரசியல், 197)

என்புழி ஓடு வந்தது.

ஆன் வந்தவழி யெல்லாம் ஆல் வருதல் வழக்கினிற் கண்டு கொள்க.

(12)

நான்காம் வேற்றுமை

73.1நான்கா குவதே,
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே.

நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர்பெற்ற வேற்றுமைச்சொல். அது யாதானுமொரு பொருளாயினும் ஏற்று நிற்கும் நிலைமைத்து. எனவே, ஏற்கும் பொருண்மைக்கண் வரும், எ - று.

அந்தணர்க்குக் கொடுத்தான் எனவரும்.

(13)

நான்காவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு

74.அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின்
அதற்குப் படுபொருளின் அதுவாகு கிளவியின்
அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாகலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்
றப்பொருட் கிளவியும் அதன்பால வென்மனார்.

இதுவும் நான்காம் வேற்றுமைக்கண் வரும் பொருள் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப்பட்டவற்றின்கண் அப்பொருள்பட வருஞ் சொல்லும், உம்மையால் அந்நிகரன பிறபொருட்கண் வருஞ் சொல்லும் நான்காம் வேற்றுமைப்பாலன, எ - று. உம்மை எச்சவும்மை.

அதற்கு வினையுடைமையின் என்பது மேற்சொல்லப்பட்ட கொடைப் பொருண்மையே யன்றி உருபேற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப் பாலனவாம், எ - று.

எ - டு. அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு, இவை வினை. கரும்பிற்குழுதான் என்பதுமது.


1. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.