அதற்கு உடம்படுதலென்பது உடம்பாடு கூறும் வழியும் நான்காவதாம், எ-று. எ - டு. கொலைக்குடம்பட்டான். அதற்குப் படுபொருளாவது-உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும் வழியும் நான்காவதாம். எ - று. எ - டு. இதற்கு நிறங்கருமை; இதற்கு வடிவு வட்டம்; இதற்கு அளவு நெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச் சொற்குப் பொருள் இது; இவ்வாடைக்கு விலை இது எனவும், இவ்வாறு வருவனவும் கொள்க. இன்னும் அதற்குப் படுபொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும், காலத்திற்கு ஆம்பொருளுமாகி வருவனவும் கொள்க. அவற்குச் சோறுண்டு. ஈழத்திற் கேற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை எனவரும். அதுவாகுகிளவி--ஒன்றொன்றாகத் திரிந்துவரும் பொருட்கு வருவது. கடிசூத்திரத்துக்குப் பொன், கும்மாயத்திற்குப் பயறு. அதற்கியாப்புடைமையாவது--உருபேற்கும் பொருட்கு வலியாதலுடைமை. ‘யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கை’ | (நாலடி. 28) |
என்றவழி வலியெனப் பொருளாயிற்று. எ - டு. போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள் எனவரும். அதற்பொருட்டாகலின் என்பது-ஒரு பொருட்காக வென்பது படவருதல். எ - டு. கூழிற்குக் குற்றேவல் செய்யும், கூலிக்கொலிக்கும். நட்பு - அவற்குத் துணை, அவற்கு நட்பு எனவரும், பகை - அவற்குப் பகை. காதல் - மகற்குக் காதலன், சிறப்பென்பது - இன்றியமையாமை பற்றிவரும். எ - டு. யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் எனவும், “நிலத்திற் கணியென்ப நெல்லுங் கரும்பும்” | (நான்மணிக். 9) |
எனவும் வரும். உம்மையாற் கொள்ளப்படுவன - இவ்வூர்க் கவ்வூர்க் காதம், நாளைக்கு வரும், இவர்க்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன். பிறவும் இந்நிகரன வெல்லாம் கொள்க (14) ஐந்தாம் வேற்றுமை 75. | 1ஐந்தா குவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னு மதுவே. |
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|