[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்57

57

இதுவுமது

84.கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.

இதுவும் அது.

இ - ள். கன்றலும் செலவும் ஆகிய வினைப் பொருண்மை மேற் சொல்லப்பட்ட இரண்டாவதனோடும். ஏழாவதனோடும் ஒன்றித் தோன்றும், எ-று.

இரண்டும் ஏழும் என்பது மேலைச்சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப் பட்டது.

எ - டு. சூதினைக் கன்றினான்; சூதின்கண் கன்றினான். நெறியைச் சென்றான்; நெறிக்கண் சென்றான். அவை பொருளுமாகி இடமுமாகி நிற்றலின் இரண்டற்கும் உரிய வாயின.

(3)

இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வுழி வரும்
வேறுபாடு

85.

1முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே
முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப.

இதுவும் இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வ
தோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். முதலும் சினையும் சேரவருஞ் சொற்கு, முதற்கண் அது வரின் சினைக்கு வரும், முதற் கண் வரின் சினைக் கண் கண் வருதல் தெளியப்பட்டது என்று சொல்லுவர் புலவர், எ - று. மயக்கம் அன்று என்றவாறாம்.

எ - டு. யானையது கோட்டைக் குறைத்தான்; யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என வரும்.

‘கண் என் வேற்றுமை சினை முன்வருதல் தெள்ளிது’ எனவே தெள்ளிதன்றிச் சிறுபான்மை வருதலும் கொள்ளப்படும்.

எ - டு. யானையைக் கோட்டைக் குறைத்தான்.

(4)

முதலும் சினையும் சொல்லுவான் குறிப்பினவாதல்

86.

முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ
நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே.


1. இந்நூற்பாவில் முன்னிரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும், பின்னிரண்டடிகளை வேறொரு நூற்பாவாகவும் கொள்வர் பிறவுரையாசிரியர்கள்.