[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்59

59

வந்தது. அரசனோடு இருந்தார் அமைச்சர் என்றவழி இருந்தார் என்னும் தொழிற்குச் சிறந்தார் அமைச்சர் ஆதலின் ஒடு அரசர்மேல் வந்தது. இஃது உடனிகழ்ச்சி ஆகலான் அத்தொழிற்கு இருவரும் சிறந்தார் எனிற் குற்றம் என்னையெனின், அரசரோடு இருந்தார் அமைச்சர், அவரை மந்திரம் இருமின் என்றார் என்றவழி, அச்சுட்டு ஈரிடத்தும் செல்லாமையாலும், தொழில் முடியும் பெயரே சிறப்புடையதெனவுங் கொள்க. இனிச் சிறப்புடைய பொருண்மேல் ஒடு வருமெனப் பொருள் உரைத்தார் உளர் 1ஆயினும், இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும்.

(7)

ஆக்கமொடு புணர்ந்த ஏது மூன்றன்கண்ணும் ஐந்தன்கண்ணும்
வரும் எனல்

89.

மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கோ ரனைய என்மனார் புலவர்.

மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரியதோர் இயல்பு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மூன்றாவதன்கண்ணும் ஐந்தாவதன்கண்ணும் விளங்க எடுத்தோதப்பட்ட ஆக்கம் என்னும் சொல்லோடு தொடர்புபட்ட ஏதுக்கிளவி, இருவகை வேற்றுமைக்கும் நோக்கு ஒரு தன்மைய, எ - று.

எ - டு. வாணிகத்தான் ஆயினான்; வாணிகத்தின் ஆயினான் என இருவாற்றானும் வரும்.

ஆக்கமொடு புணர்ந்த ஏது என விதந்தோதிய அதனான், ஏனை ஏதுக்கள், நோக்கு ஒவ்வாத நிலைமைய என்பது பெறுதும், “அமைத்தனாற் றக்கான் அரசன்” என்னும் பொருட்கண், “அமைத்தனிற் றக்கான் அரசன்” என்றவழித் திரிபின்றி ஏதுப் பொருள்படுதலின்றி, அமைத்ததனைப்போல வென்றாதல், அமைத்ததனிற் காட்டில் என்றாதல் பொருள் உரைக்கவும் படுமாகலால், ஆக்கமொடு புணர்ந்த ஏதுவே ஒப்ப முடிவது. ஏனைய ஏதுக்கள் திரிபுடைய என்பது அறிவித்தற்கு இச்சூத்திரங் கூறப்பட்டது. (8)

நோக்கல் நோக்கப் பொருளில் மூன்றாவதும் ஐந்தாவதும்
மயங்கல்

90.

இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ்
விரண்டன் மருங்கின் ஏதுவு மாகும்.

இரண்டாவதனோடு மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இரண்டாம் வேற்றுமைக்கண் ஓதப்பட்ட நோக்கப் பொருண்மையின்கண் நோக்குதல் அல்லாத நோக்கம், மூன்றாவதினும் ஐந்தாவதினும் ஓதப்பட்ட ஏதுவினும் ஆம், எ - று.


1. பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இங்ஙனமே பொருளுரைப்பர்.