ஆறாவதன் பொருளில் வரும் உயர்திணைத் தொகையில் நான்கனுருபு விரிதல் 96. | அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் னுருபுகெடக் குகரம் வருமே. |
ஆறாவது நான்காவதனோடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உயர்திணைத் தொகைப்பொருண்மேல் வரும் அது வென் வேற்றுமை அது என்னும் உருபுகெடக் கு கரம் வரும், எ - று. எ - டு. நம்பி மகன் என்பதனைக் கிழமைப் பொருள்பட விரிப்புழி, நம்பிக்கு மகன் என விரியும், நம்பியது மகன் எனின் வழுவாம். (15) வாழ்ச்சிக்கிழமையில் ஆறாவதும் ஏழாவதும் மயங்கல் 97. | ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழு மாகும் உறைநிலத் தான. |
ஆறாவதனோடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆறாம் வேற்றுமைக்கண் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழாவதும் ஆம்; பொருள் உறையும் நிலத்துக்கண், எ-று. எனவே உறையாப் பொருட்கண் வாராது என்றவாறாம். உறை பொருட்கண் வந்தது--யானையது காடு. உறையும் நிலத்துக்கண் வந்தது--காட்டது யானை. அது காட்டுள் யானை எனவும் வரும். (16) வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை 98. | அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது உருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயி னிலையும் வேற்றுமை யெல்லாம் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. |
வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவும் ஆகித் தொன்னெறியிற் றப்பாது, உருபானும் பொருளானும் இயல்பு தடுமாறி, இரண்டிடத்தும் நிலைபெறும் வேற்றுமைச் சொல்லெல்லாம் ஆராய்ந்து உணர்வார்க்குப் பொருள் திரியும் இடன் இல, எ-று. என்றது--பரந்துபட்ட சொல்லெல்லாம் எடுத்து ஓதல் அரிதாகலான் ஈண்டு எடுத்து ஓதப்பட்ட நிகரன வாகி உயர்ந்தோர் வழக்கினும்,
|