[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்65

65

என்பதனுள் ஆலும், ஒடுவும் பல அடுக்கிவந்து நல்லை என்பதனோடு முடிந்தன.

(18)

இதுவு மது

100.இறுதியு மிடையும் எல்லா வுருபும்
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.

பல உருபு தொடர்ந்து அடுக்கி வருமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். முதற்கண் நின்ற வேற்றுமை உருபே பொருளோடு, முடிதலன்றி, இறுதிக்கண்ணும் இடையின்கண்ணும் எல்லா உருபும் விரவிவந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதல் நீக்கார், எ - று.

நெறிபடுபொருள் என்பது முதலும் இடையும் இறுதியும் நின்ற பலவகை உருபிற்கும் ஏற்புடைப் பொருளை.

எ - டு. குயவன் குடத்தைத் திகிரியால் அரங்கின்கண் வனைந்தான் எனவும், சாத்தன் ஆடையை வலியினாற் காட்டின்கண் பறித்தான் எனவும் இறுதியும் இடையும் முதலும் நின்ற உருபெல்லாம் ஒரு வினையால் முடிந்தவாறு கண்டு கொள்க.

(19)

இதுவு மது

101.பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.

இது பல உருபுந் தொடர்ந் தடுக்கியவழி வரும் வேறுபாடும்,
உருபு தொகுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இறுதியும் இடையும் நின்ற எல்லா உருபும் முடிக்கும்வினை ஒன்றனோடு முடிதலேயன்றி, வேறு வேறு வினையேற்று ஒரு வினையோடு முடிதலும், அவ்வுருபுகள் தொக்குநின்று முடிக்குஞ் சொல்லோடு முடிதலும் நெறிபட வழங்கிய நெறிப் பக்கத்தன என்று சொல்லுவர், எ - று.

இறுதியும் இடையும் என்பது மேலைச் சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. நெறிபட வழங்கிய பக்கம் என்றமையான் ஏற்கும் வினையே கொள்ளப்படும்.

பிறிது பிறிதேற்றல் கூறல் வேண்டா; வேற்றுமை உருபு வினையோடு முடியும் என்பதனாற் பெறுதுமெனின், மேல் நின்ற அதிகாரம் பல உருபடுக்கியவழி ஒருவினையான் முடியும் என்றமையால், தனித்தனி வினைகொண்டு முடியவும் பெறுமோ என நின்ற ஐயம் தீர்த்தற்குக் கூறல் வேண்டுமென்க.

ஈண்டு உருபு தொகுதல் கூறிய தென்னை? வேற்றுமைத் தொகை என எச்சவியலுட் கூறுகின்றாராதலின் எனின், தொகைச் சொல்லாவது