[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்67

67

தொக்கவழியுந் தம் பொருண்மை விளக்கின. ஏனையவும் இவ்வாறு வருமெனக் கருதின் அவை தம் பொருள் படாமையிற் றொகா என்றார். வெட்டினான் வாள்; கொடுத்தான் சாத்தன்; நீங்கினான் ஊர்; ஆடை சாத்தன் என்றவழித் தம்பொருள் படாமை கண்டுகொள்க.

(21)

வேற்றுமை யுருபே யன்றிப் பிறவும் மயங்கு மெனல்

103.1யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.

வேற்றுமை உருபு தம்முள் மயங்குதலின்றிப் பிற உருபொடு
மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். யாதொன்றன் உருபிற் கூறினும் பொருள் செல்லும் வழி வேற்றுமையும் செல்லும், எ - று.

யாதனுருபு என்பது வேற்றுமை யல்லாத உருபு. உருபு எனினும் வடிவு எனினும் ஒக்கும். 2அம்மூ வுருபின தோன்றலாறே என வடிவிற்குப் பெயராகிப் பிறாண்டும் வந்தது.

‘வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று’

(குறள் 11)

எனவும். மருந்துண்டு நோய்தீர்ந்தது எனவும் வருவுழி, உலகம் வழங்கி வருதற்கு மழை ஏதுவாகலானும், நோய் தீர்தற்கு மருந்து ஏதுவாகலானும் இவற்றிற்குப் பொருளுரைக்குங்கால் மழை நிலைநிற்றலான் உலக நடை தப்பாது எனவும், மருந்துண்டலால் நோய் தீர்ந்தது எனவும் உரைக்கவேண்டுதலின், இவை வேற்றுமை உருபான் வந்திலவாயினும், பொருண்மை முகத்தான் வேற்றுமை யாதலின், இவை இவ்வாறும் வரப்பெறும் என்று வழுவமைத்த வாறாம்.

(22)

எதிர்மறைக் கண்ணும் வேற்றுமைப் பொருள் திரியாமை

104.

எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபில்
பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே.

எல்லாவேற்றுமைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். வேற்றுமைச் சொற்கள் தத்த மரபிற் பொருணிலையை எதிர்மறுத்து மொழியினும் திரியா, எ - று.

எ - டு. குடத்தை வனையான், சாத்தனொடு கூடான், அந்தணர்க்குக் கொடான், ஊரின் நீங்கான், சாத்தனதன்று ஆடை, குன்றத்துக்கண் இரான் எனவரும்.


1. நன்னூலில் இந்நூற்பா அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது(நன்-பெயரியல்-60)

2. சொல், பெயர். 6.