68தொல்காப்பியம்[வேற்றுமை மயங்கியல்]

68

குடத்தை வனையான் என்றவழிச் செயப்படுபொருள் தோன்றிற்றின்றாயினும், இவ்வாறு சொல்லப்பெறும் என வழுவமைத்தவாறு.

(23)

உருபுகளுட் சில திரியு மெனல்

105.கு ஐ ஆன்என வரூஉம் இறுதி
அவ்வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே.

வற்றுமை யுருபினுள் சிலவற்றிற்கு உரியதோர் திரிபு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். கு, ஐ, ஆன் என்று சொல்லப்பட்ட தொடர்மொழி இறுதிக்கண் வரும் உருபு, அவ்வொடும் சிவணும் செய்யுளகத்து, எ - று. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.

(24)

எய்தியது விலக்கல்

106.1அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கில்
குவ்வும் ஐயும் இல்லென மொழிப.

எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று.

இ - ள். அஃறிணைப் பொருட்கண் குவ்வும், ஐயும் அகரத்தொடு சிவணா, எ-று.

எனவே, உயர்திணைக்கண் மூன்றுருபும் சிவணும் என்பதூஉம் அஃறிணைக்கண் ஓருருபு சிவணும் என்பதூஉம் கூறியவாறாம்.

எ - டு.2கடிநிலை யின்றே ஆசிரி யற்க; புள்ளினான; புலவரினான என வந்தன. ஐகாரம் அகரத்தோடு சிவணுமாறு வந்தவழிக் கண்டு கொள்க. பரிபாடலகத்து-நின்னொக்கும் புகழ் நிழலவை (பக்கம் 4) நீழ னேமியன என்பன அகரத்தோடு சிவணி வந்தன எனினும் அமையும். இவை அஃறிணைப் பொருள் அன்றோ எனின்; தெய்வப் பொருண்மையான் உயர்திணையாம்.

(25)

ஏனையுருபுகள் நான்கனுருபில் சென்று மயங்கல்

107.இதன திதுவுற் றென்னுங் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும்
அதனாற் செயப்படற் கொத்த கிளவியும்
முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும்
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும்

1. இளம்பூரணர் ‘அவற்றுள்’ என்ற தனிச்சொல்லுடன் இச்சூத்திரத்தை ஆள்வர்.

2. தொல். புள்ளி. 94.