கொள்ளவே, வினையால் உரைக்குங் கிளவியும், வினைமுதலான் உரைக்குங் கிளவியும் ஆகுபெயராம் என்றவாறாம். வினையான் உரைக்கப்பட்டன;-- எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும், சொல்லப்பட்டதனையும் அப் பெயரான் வழங்குதலின், ஆகுபெயராயின. என் காவலிலே கட்டான் என்பதும் அது. வினைமுதலான் உரைக்கப்பட்டன செய்தானாற் செயப்படு பொருட்குப் பெயராகி வருவன: சாலியனால் நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது. தொல்காப்பியம் என்பதோ எனின், அஃது ஈறுதிரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம். ‘அனைமரபின’ என்றதனான் ஈண்டு ஓதப்பட்டனவற்றுள் அடையடுத்து வருவனவும் கொள்க. தாழ்குழல் என்றவழி அதனையுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ வெனின். ஆண்டு எடுத்து ஓதாமையினானும், பொருள் ஒற்றுமைப்படுதலானும் ஆகாது என்க. (30) இதுவுமது 112. | அவைதாம், தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும், ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலை 1வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். |
இதுவும் ஒருவாற்றான் ஆகுபெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. விரிந்தது தொகுத்தலை நுதலிற்று எனினும் அமையும். இ - ள். மேற் சொல்லப்பட்ட ஆகுபெயர்தாம், தத்தம்பொருள்வயிற் சிவணலும், தம்மொடு சிவணலும், பொருத்தமில்லாத நெறிக்கண் சுட்டலும், பிறிதின்கிழமைப் பொருளைச் சுட்டலும் ஆகிய அவ்வியல்பினையுடைய; அவ்வாறு சொல்லுங்காலத்து வேற்றுமைப் பொருட்கண் பாதுகாத்தல் வேண்டும். எ - று. சிவணல் என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக. சுட்டல் என்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக. ‘தத்தம் பொருள் வயிற் சிவணல்’ என்பது முதற்பொருள் சினைப்பொருளைச் சிவணுதல். அவை கடு, பொன் என்பன. ‘தம்மோடு சிவணல்’ ஆவது சினைப்பொருள் முதற்பொருளைச் சிவணுதல், அவை பூ, நீலம், சோறு, துடியிடை. தாழ்குழல் என்பன. ஒப்பில் வழிக்கண் சுட்டியது வேளார்காணி. ‘பிறிது பொருள் சுட்டியது’ சாலியன். வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் என்பது-ஆகு பெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்படாது; வேற்றுமைப் பொருட்கண்ணே வரப்பெறுவது என்றவாறு.
1. இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இவ்வடியைத் தனி நூற்பாவாகக் கொள்வர்.
|