84கிளவியாக்கம்

உம்மை எதிர்மறை. இடம் என்றது   நிலையை.   வேறு   நிலையாவது
ஈறுதிரிந்து வேறுபடுதலும் முழுதுந்திரிந்து வேறுபடுதலுமாம்.
 

எ-டு :குடிமையன் வந்தான். பெருந்திறலோன்  வென்றான்  எனவரும்.
இவை ஈறுதிரிந்து உயர்திணையாயிசைத்தன. நிலமகள் (உலகம்) செழித்தாள்.
நாமகள்   (சொல்)   அருளினாள்   எனவரும்   இவை   முழுதும்திரிந்து
உயர்திணையாய் இசைத்தன.
 

அவற்றுள் ஈறுதிரிதற்கேலாத குழவி, தன்மைதிரிபெயர், உயிர்,  உடம்பு,
ஞாயிறு, திங்கள் போல்வனவற்றை நீக்குதற் பொருட்டு   "நின்றாங்கிசையா
வேறுபட்டிசைக்கும்" என ஒருங்கு ஒரு  சூத்திரமாகக்  கூறாமல்  பிரித்துக்
கூறினார் என்க.
 

சூ. 60 :

எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே  

[60]
 
க-து:

இனம் உள்வழிச்செப்பு நிகழ்த்தும் மரபாமாறு கூறுகின்றது. 

 

உரை :ஒரு பொருளைப்பற்றிச் செப்பாக  மொழிந்த சொல்   அதற்கு
இனமான பொருளை ஒருங்கு உணர்த்தற்கும் உரித்தாகும்.
 

உம்மையான்     இனம்    செப்பாமைக்கும்    உரித்தாகும்    என்க.
இனப்பொருட்கருத்து உள்ள இடத்தன்றி  இப்பொருட்பேறு  நிகழாதாதலின்
பிறபொருள் என்னாது, இனம் செப்பலும் என்றார்.
 

எ-டு :   ஈகை    புகழைத்தரும்,   கல்வி   அறிவைப்   பெருக்கும்,
அளவறிந்துண்பான் இன்புறும் என்றவழிக் கூறுவோனுக்கு    இனக்கருத்தை
உணர்த்துதலும் கருத்தாயின், ஈயாமை இகழைத்தரும், கல்லாமை  அறிவைச்
சுருக்கும், கழிபேரிரையான் துன்புறும் என்னும்   பொருள்  உடன்தோன்றி
நிற்கும்.
 

அரசு வாழ்க, அந்தணர் வாழ்க, தமிழ்வளர்க என்ற  வழி  அரசல்லார்
வீழ்க அந்தணரல்லார் வீழ்க தமிழ் அல்லவை சுருங்க  என்னும்  கருத்துத்
தோன்றாவாகலின் இவைபோல்வன இனஞ் செப்பாவாம்.
 

இனித் தென்சேரிக் கோழி வென்றது என்புழி வடசேரிக்கோழி தோற்றது
எனவருதல் இனஞ் செப்புதலாகாது.   என்னை?   ஒன்று   தோற்றாலன்றி
ஒன்றற்கு வெற்றிகிட்டாது ஆகலின்  இவை   போல்வன  பொருளாற்றலாற்
பெறப்படுவனவாம். ஆவாழ்க அந்தணர் வாழ்க என்போன் பிறவும் பிறரும்
வீழ்க என்னும்