வேற்றுமையியல்87

நிலைகளைப்பற்றி இவ்வியலுட் கூறுகின்றார்.  வேற்றுமையாவது   யாதானும்
ஒரு நிலையை இயல்பாகக் கொண்டு   அந்நிலையினின்று  திரிபுறுதலாகும்.
ஒரு   தொடரின்கண்   அமைந்துள்ள   சொற்பொருள்வேறுபடாத  நிலை
இதுவென்றும், அதுவேறுபடும் முறைமை  இதுவென்றும்,   வேறுபடுத்துவது
இதுவென்றும் விளக்குதலின் இவ்வியல் வேற்றுமையியல் எனப்பட்டது.
 

ஈண்டு இயல்புநிலை என்பது எழுவாய்  வேற்றுமைப்பொருளாகும். அது
செயப்படுபொருள் முதலாக வேற்றுமைப்படுதலே வேற்றுமைத் தொடராகும்.
எழுவாய் வேற்றுமை திரிபுறாதது எனின்   அதனை   முதல்   வேற்றுமை
என்பது முரணாம் எனின், ஆகாது என்னை? பொருளைச் சுட்டும் சொற்கள்
யாவும்     பெயர்    என்பதும்      அப்பொருளின்     இயல்பினையும்
புடைபெயர்ச்சியையும் சுட்டும்   சொற்கள்   யாவும்   வினை   என்பதும்
தமிழிலக்கணமாகும். அங்ஙனம் ஒருபொருளைச்  சுட்டி  அதுபற்றிச்செப்பும்
வினாவும்   நிகழ்த்துங்கால்   பன்னூறு   வகையான   பொருள்களினின்று
அப்பொருள் பிரிக்கப்பட்டுத் தலைமை பெறுதலின்   அஃது   எழுவாயாக
ஆகின்றது. அங்ஙனம் பிரித்தலால் தனிமைப்படும்   நிலைமையே   அஃது
எய்தும் வேறுபாடாகும்.  அவ்வேறுபாடு   அடிப்படையாதலின்  அங்ஙனம்
பெயர்தோன்றி நிற்கும் நிலையை முதல் வேற்றுமை எனத்  தொல்லாசிரியர்
வகுத்தனர். அஃது  உருபினான்   வேறுபடாமை   நோக்கி   அல்வழியுள்
அடக்கினர். விளி வேற்றுமையும் படர்க்கைநிலை  மாறி   முன்னிலையாகப்
பொருள் வேறுபடுதலின் அதனை எட்டாம் வேற்றுமை   என்றனர்.  அஃது
உருபினான் திரிபுறாமையின் அதுவும் அல்வழியுள் அடக்கப்பட்டது.
  

ஐ முதலிய ஆறு  உருபுகளை   ஏற்று   வேற்றுமையடைவது   பெயர்
(பொருள்) ஆதலின் வேற்றுமை இலக்கணத்தைப் பெயர்  இலக்கணத்தொடு
கூறாமல் பிரித்துக் கூறியது   என்னை   எனின்?   வேறுபடுவது   பெயர்
(பொருள்)      ஆயினும்,       அவ்வேறுபாட்டினைச்        செய்வது
வினைச்சொல்லாகலானும், அவ்வேறுபாட்டினைப் புலப்படுத்துவது உருபாகிய
இடைச்சொல்லாகலானும், பெயர், வினை,   இடை   என்னும்   மூன்றற்கும்
உரிமையுடையதனை     ஒன்றனுள்    அடக்குதல்    நெறியாகாமையான்
பிரித்துக்கூறப்பட்டது. அன்றியும்
  

பெயர் முதலிய   நான்கு   இயல்களிற்    கூறப்பெறும்    இலக்கணம்
அவ்வவற்றின் இயல்பும் மரபும் பற்றிய தனிச்சொற்களின் இலக்கணமாகலின்
தொடர்மொழிகளாற்      புலப்படுவதாகிய      இதனை     அவற்றோடு
கூறலாகாமையின்     கிளவியாக்கத்தையடுத்துப்    பெயரியலுக்கு    முன்
வைக்கப்பட்டதென்க. பெயர்ப்பொருள் வினையான்