152வேற்றுமை மயங்கியல்

எ-டு :நூலது    குற்றங்கூறினான்     என்னும்        தொடர்க்கண்
உரிமைப்பொருட்குரிய    ஆறாவது,     நூலைக்குற்றங்கூறினான்   எனச்
செயப்படுபொருட்டாய்வந்தது.   அவனது குற்றேவல்  செய்தான்  என்னும்
தொடர்   அவனுக்குக்  குற்றவேல்  செய்தான்  எனக்கோடற் பொருட்டாய்
வந்தது. பிறவும் தொன்னெறி மரபினவாய் வருவன ஓர்ந்தறிந்து கொள்க.
 

சூ.112: 

வினையே செய்வது செயப்படு பொருளே 

நிலனே காலம் கருவி என்றா 

இன்னதற் கிதுபய னாக என்னும் 

அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ 

ஆயெட் டென்ப தொழில்முத னிலையே  

(29)
 

க-து :
 

"அன்றி    யனைத்தும்    பெயர்ப்பய      னிலையே"  எனவும்
"வினையே   "வினைக்குறிப்   பவ்விரு    முதலிற்     றோன்று மதுவே"  எனவும்  "வினைமுதற்  கருவி  அனைமுதற்  றெனவும்
"எப்பொரு ளாயினும்   கொள்ளும்"   எனவும்   "இதனினிற்றிது"
எனவும் "இதனதிது"  எனவும் "அனைவகைக் குறிப்பிற்றோன்றும்"
எனவும்,    முதல்  ஏழுவேற்றுமைக்குக் கூறிய  இலக்கணங்களான் பெயர்ப்பொருளை        வேற்றுமைப்படுத்துவன       தொழில்
நிலைக்கிளவிகளே          என்பது               ஓராற்றான்
புலப்படுத்தப்பட்டமையின் தொழில் நிலைக்கிளவிகள்   அங்ஙனம் வேற்றுமைப் படுத்தற்குக் காரணமாமாறு கூறுகின்றது.
 

உரை: வினையே   =   புடைபெயர்ச்சியை   உணர்த்தும்  உண், தின்,
செல்,   வா,   போ முதலிய    வினையடிகளாகிய  வினையும். செய்வது =
தொழிலை  நிகழ்த்தும்   வினை முதலும்,   செயப்படு  பொருள் = வினை
முதலின் தொழில்   சென்றுபடும் பொருளும்.   நிலனே  =   அத்தொழில்
நிகழ்தற்கு    ஆதாரமாகிய    இடனும்.   காலம்  =  அத்தொழில்  நிகழ்
காலமும், கருவியும்   =     தொழிலை    நிகழ்த்தும்   வினை  முதற்குத்
துணையாக     நிற்கும்    கருவியும்    ஆகிய    ஆறும்,  அத்தொழில்
நிகழ்த்துதற்குரிய    நோக்கமாகிய    இன்னதற்கு எனவும் அத்தொழிலின்
விளைவாகிய      இது      பயனாக   எனவும்        சொல்லப்பெறும்
இம்மரபினையுடையவாகிய  இரண்டொடும்  கூடி, அமையும்  அவ் எட்டும்
முற்றி    நிற்கும் தொழிற்கு   அடிப்படைக் காரணங்கள்  என்று  கூறுவர்
ஆசிரியர்.
 

வினைச்    சொற்கள்  இங்ஙனம்  எட்டுக்காரணங்களை உடைமையான் அவை   பெயர்ப்   பொருளை வேற்றுமை செய்தற்குரியவாயின என்பதும்.
வேற்றுமை மயங்கி வருதற்குக்   காரணமும் அவையே  என்பதும் இதனாற்
புலப்படும்.