வேற்றுமை மயங்கியல்159

மொழிதலைக்   காரிய   ஆகுபெயர்  என்றும் இயல்வது கூறலைக் காரண
ஆகுபெயர் என்றும் கூறுவர்.
 

6) பவளவாய், திரிதாடி, அறுகால் என்பவை, வாயினை உடையாளையும்
தாடியை   உடையானையும், கால்களையுடைய  வண்டினையும் உணர்த்தின.
பவளம், திரிபு, ஆறு   என்பவை  அவற்றிற்கு அடையாக வந்து அவற்றை
விளக்கி    நின்றன. இது    இருபெயரொட்டு.    இவற்றுள்   பவளவாய்,
திரிதாடி  என்பவை    அன்மொழித்   தொகையல்லவோ  எனின் அல்ல.
வாயும்,   தாடியும்,    இயைபுடையவாய்ச்       சினையிற்கூறும்  முதலறி
கிளவிகளாய்    நிற்றலின்     அன்மொழியாகா    என்க.   பால்வளை -
பால்போலும் வெள்ளிதாகிய   வளையலை    அணிந்தாள்.  பெய்வளை -
பெய்த வளையலை அணிந்தாள் என்றாற் போல இயைபின்றிவரின்  அவை
அன்மொழித்தொகையாதற்கு        ஏற்குமென்க.     பிறவிளக்கங்களைத்
தொகைமொழி     இலக்கணங்கூறும்      எச்சவியலுட்கண்டு    கொள்க.
வகரக்கிளவி,         பெயர்ச்சொற்           கிளவி       என்பனவும்
இருபெயரொட்டாகுபெயராம்.   இவற்றை  முன்மொழி  (கிளவி) ஆகுபெயர்
என்றும் கூறுவர்.
 

7) கம்பரைக்கற்றான்,   திருவள்ளுவரைப்     பயின்றான்    என்பவை
அவராற்      செய்யப்பெற்ற     நூல்களை      உணர்த்தின  -  இவை
வினைமுதலுரைக்கும்    கிளவியாம். தொல்காப்பியம், கபிலம்    என்பவை
ஈறுதிரிந்து செயற்பாடு உணர்த்தி நிற்றலின் ஆகுபெயராதற்கேலா என்க.
 

திருவாசகம்,    திருவாய்மொழி   என்பவை    பாக்களை   உணர்த்தி
நிற்பின்  ஆகுபெயராம். இவற்றை அடையடுத்த ஆகுபெயர்  என்ப. இவை
பாக்களை   உணர்த்தாமல்  நூல்களை   உணர்த்தி  நிற்பின் அன்மொழித்
தொகையாம் என்க.
 

சூ. 115 :

அவைதாம் 

தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் 

ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் 

அப்பண் பினவே நுவலுங் காலை  

[32]
 

க-து :

ஆகுபெயர்கள் அமைந்து நிற்கும் வகைமை கூறுகின்றது.
 

உரை :மேல்   அனை    மரபினவாய்   வரும்   எனக் கூறப்பெற்ற
ஆகுபெயர்க்கிளவிகள்    தாம்     இவ்வியல்பின  எனச் சொல்லுமிடத்து
அவை   தம்    பொருளிடத்து  இயைபுடைமையான் தம்மொடு பொருந்தி வருதலும் ஒத்துடைமையில்லாத பிற இயைபுகளான்