வேற்றுமை மயங்கியல்161

வெட்டப்பெற்ற   புண்   என   ஒப்பில்  வழியாற்   பிறிது பொருள்சுட்டி
வந்த   ஆகுபெயர்.  நான்காம்  வேற்றுமை  பற்றியும் ஐந்தாம் வேற்றுமை
பற்றியும் வேறுபாடுறுதல் அரிதாகும்.
 

தண்டூண்    கிடந்தது    என   நாலாவதற்கு வலிந்து உரிமை செய்து
காட்டுவார்       நச்சினார்க்கினியர்.     அவர்       ஐந்தாவதற்கெனக்
காட்டும்  பாவை   வந்தாள்    என்பது      இரண்டாவதற்கேற்பதல்லது
ஐந்தாவதாகாமை     வேற்றுமையியலுட்   கூறிய    விளக்கத்தான் அறிக.
(தண்டூண் -- வாழைத்தண்டாகிய உணவு)
 

சூ. 117 :

அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி 

உளவென மொழிப உணர்ந்திசி னோரே  

(34)
 

க-து : 

அளவுப்     பெயரும்    நிறைப்    பெயரும் ஆகுபெயராய்
வருமென்கின்றது
 

உரை :அளவுப்பெயரும்     நிறைப்பெயரும்      அனைமரபினவாய
இலக்கணத்தொடு    பொருந்தக்   கொள்ளுமிடத்து  அவை   மேற்கூறிய
ஆகுபெயராதற்கு  உள    என்று கூறுவர்     இலக்கண மரபுணர்ந்தோர்.
நீட்டலளவையும் எண்ணலளவையும் அளவை என்பதனுள் அடங்கும்.
 

அளவைப்  பெயர்கள் காட்சிப்பொருளொடு படுத்துணரப்படும் கருத்துப்
பொருளாகலின்   நாழி  -  உழக்கு.   கழஞ்சு,   தொடி, தடி, மா, ஒன்று,
இரண்டு    என்னும்    பெயர்கள்   அவ்அளவைகளைத் தரும் மரக்கால்,
நிறைகல்,     அளவுகோல்,     பொருள்     முதலிய    கருவிகளையும்,
அக்கருவிகளான்      அளக்கப்பெற்ற   பொருள்களையும் ஆகுபெயரான்
உணர்த்தலின் மேலனவற்றொடு ஒருங்கு கூறாமல் பிரித்துக் கூறினார்.
 

வரலாறு : இஃதொரு   நாழி  என்பது  அளவு கருவியையும் அளக்கப் பெற்ற   பொருளையும்  இடம்   நோக்கி உணர்த்தும்.  இவ்வாறே நிறைப்
பெயரும்- நீட்டலளவைப் பெயரும் உணர்த்தும்  எண்ணலளவை, பொருள்
பற்றியே உணர்த்தும் அது கருவியன்மையன். இஃதொரு  கழஞ்சு -- கருவி
--  பொருள். இஃதொரு  மா -- நிலம். இஃதொரு   கோல் --  கருவி --
பொருள். இஃது ஒருநாழி -- கருவி -- பொருள். இஃது ஒன்று, இது  பத்து
-- பொருள் எனவரும்.
 

அளவுப்பெயர்கள் கருவியையும் உடைமைகளையும், இடத்தையும் பற்றிப்
பொருள் கோடற்கியை வருதலின் -- அளவு கருவிகளை  உணர்த்தும்வழித்
தத்தம் பொருள்வயின் தம்மொடு