எ-டு :கோவே வருக ! வேந்தே வருக ! எனவரும், இவ்உகரம் சார்பெழுத்து என்பது உணர அதனைப்பிற் கூறினார். |
சூ. 124 : | உகரந் தானே குற்றிய லுகரம் |
[6] |
க-து : | இஃது ஐயமகற்றுகின்றது. |
|
உரை :மேல் வாளா கூறிய உகரம் சார்பெழுத்துக்களுள் ஒன்றாகிய குற்றியலுகரமாகும். முற்றியலுகரமாயின் உடம்படுமெய் பெற்றுப் புணர்தலல்லது உயிரேற இடந்தாராதாகலின், உகரந்தானே குற்றியலுகரம் என விளக்கினார் என்க. |
சூ. 125 : | ஏனை உயிரே உயர்திணை மருங்கின் |
| தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் |
(7) |
க-து : | உயர்திணையிடத்து விளியேலா உயிரீறுகள் இவை என்கின்றது. |
|
உரை :மேற்கூறிய நான்குமல்லாத ஏனைய எட்டு உயிரீற்று உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளா எனக் கூறுவர் புலவர். ஏ-தாம் என்பவை இசைநிறை. |
கொள்பவை இவை எனவே கொள்ளாதவை தாமே பெறப்படுமாயினும் இங்ஙனம் எடுத்துக் கூறுதல் பிறிதொரு பயன் நோக்கியதாகும். இதன் பயனாவது : எடுத்தோதாத அகர ஈறும், ஆகார ஈறும், முற்றுகரஈறும் ஊகார ஈறும் முறையே (மக) மகவே ! (எல்லா) எல்லா ! (திரு) திருவே ! (ஆடூஉ) ஆடூவே என ஏகாரம் பெற்றும் இயல்பாயும் விளி ஏற்றலும், திரியும் எனப்பெற்ற இகர ஐகாரங்கள் (கணி) கணியே ! (இறை) இறையே ! என ஏகாரம் பெறுதலும். மலர்விழி - பணிமொழி என்றாற்போல வரும் இருபெயராட்டு ஆகுபெயர்களின் இகர ஈறு ஈயாகத்திரியாமல் ஏகாரம் பெறுதலும் பிறவும் சான்றோர் வழக்குநோக்கிக் கொள்ள வைத்தலாம் என்க. |
சூ. 126 : | அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் |
| இயற்கைய வாகும் செயற்கைய என்ப |
(8) |
க-து : | விகாரவகையான் வரும் இகரஈற்றுப் பெயர்கட்கு எய்தியது விலக்குகின்றது. |
|
உரை: இயல்பாகவன்றி அளபெடுத்தலான் விகாரப்பட்டு மிக்குநிற்கும் இகர ஈற்றுப் பெயர்கள் திரியாமல் இயற்கையவாய் வரும் இலக்கணத்தனவாகும். |