168விளி மரபு

எ-டு :நம்பி  வாழி !  நங்கை  வாழி ! வேந்து வருக ! கோ காணாய்
! எனவும், மகவாராய் ! எல்லா வருக ! ஆடூ செல்க ! எனவும்வரும்.
 

இச்சூத்திரத்தை     உயிரீறுகளின்     பின்னரும்     புள்ளியீறுகளின்
முன்னரும் அரிமா நோக்காக வைத்தார், புள்ளியீற்று அண்மை  விளிக்கும்
இதுவே விதியாகலின் என்க.
 

சூ. 129 :

னரலள என்னும் அந்நான் கென்ப 

புள்ளி யிறுதி விளிகொள் பெயரே  

[11]
 

க-து :

விளியேற்கும் புள்ளியீற்றுப் பெயர்களாமாறு கூறுகின்றது.
 

உரை :பதினொரு   புள்ளி  ஈறுகளுள் னரலள  என்னும் அந்நான்கு
புள்ளியை இறுதியாக உடைய பெயர்கள் உயர்திணைக்கண்  விளிகொள்வன
எனக் கூறுவர் புலவர்.
 

முறையிற்   கூறாது   னகரம்  முன் வைத்தார் னகரமும் ரகரமும் அன் ஆன்   அர் ஆர்   இர் என   நின்று  அவ்வவற்றிற் கேற்ற விதி பெற்று
வருமென் பதறிவித்த தற்கு என்க.
 

சூ. 130 :

ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா 
[12]
 

க-து :
 

உயர்திணை   மருங்கின் விளியேலாத புள்ளியீற்றுப் பெயர்கள்
இவை என்கின்றது.
 

உரை:  மேற்கூறிய    நான்குமல்லாத    ஞணநம    யவழ  என்னும்
ஏழுபுள்ளியீற்றுப் பெயர்கள் உயர்திணைக்கண் விளி  கொள்ளாவாம்.
 

இங்ஙனம்    வாராதனவற்றைக்    கூறியதன்    பயனாவது :  னரலள
என்பவற்றிற்கு  இனி    ஓதும்    விதிகளேயன்றிச்    சிறிது  வேறுபட்ட
விதிகளையும்  அவை  எய்தும்   என்பதும்,    கொள்ளா   என்றவற்றுள்
ணகரமும் யகரமும் ழகரமும் சிறுபான்மை    விளியேற்று   வருமென்பதும்
பெறுதலாம். அவற்றை அவ்வவ் ஈறுபற்றி ஓதும்  சூத்திர உரையுள்  கண்டு
கொள்க.
 

கொள்ளா  என்றவற்றுள்   ணகர   ஈறு  ஆண்வருக ! ஆணேவருக ! என்றும் யகர ஈறு  'விளங்கு மணிக்கொடும்  பூண்  ஆய் !'  (புறம் - 130)
எனவும்,   விறற் சேய்   வருக !   எனவும்,    அருந்திறல்,  பெருந்திறல்
என்றாற்போல   ழகர ஈறு  அரும்புகழ்  வருக ! பெரும்புகழ் வருக ! என
ஆகுபெயராயும்வரும்.