விளி மரபு169

ஞ ந ம    என்பவை உயர்திணை மருங்கிற் பெயராய் வாராமையானும்
வகரம்    சுட்டுப்பெயராயும்      உரிச்சொல்லாயுமன்றி    இயற்பெயராய்
வாராமையானும்     விலக்குண்டன.     இச்சூத்திரத்தை    வினையினும்
பண்பினும்    என்னும்   சூத்திரத்தின் பின்வையாது  ஈண்டு   வைத்தார்,
கூறப்பெற்ற   புள்ளியீறுகள்     பிறவாறும்    விளிகொள்ளும்   என்னும்
இலக்கணம் அதிகரித்தற் பொருட்டென்க.
 

சூ. 131 :

அவற்றுள் 

அன்என் இறுதி ஆவா கும்மே  

[13]
 

க-து :

னகர ஈற்று உயர்திணைப்பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது.
 

உரை :விளிகொள்ளும்       புள்ளியீறுகளுள்     அன்    என்னும்
இடைச்சொல்பற்றி நிற்கும் பெயரினது ஈறு ஆவாகத் திரிந்து வரும்.
 

எ-டு :(தோழன்)   தோழா   வருக !   (சேர்ப்பன்) சேர்ப்பா வருக !
எனவரும்.
 

"ஏனைப்புள்ளியீறு" என்றதனான்  முறைமை சுட்டா மகன் என் கிளவி,
படிவ உண்டிப் பார்ப்பன மகனே ! எனவும், மன்னன்  என்பது மன்னனே !
மன்னவனே !   எனவும்  கிழவன்   என்பது   கிழவோய் !  கிழவோயே !
எனவும் வருதலையும், ஒன்றென முடித்தல் என்னும் உத்தியான்   தம்முன,்
எம்முன் என்னும் முறைப் பெயர் தம்முனா ! எம்முனா ! என வருதலையும்
கொள்க.
 

சூ. 132 :

அண்மைச் சொல்லிற்கு அகரமு மாகும் 
[14]
 

க-து :

இதுவுமது.
 

உரை:  அன்னீற்றுப்   பெயரீறு    அண்மை   விளிக்கண் அகரமாகத்
திரிதலும்  ஆகும். திரிதலாவது  குன்றலாம்.  உம்மையாற்றிரியாது நிற்றலே
பெரும்பான்மை எனக் கொள்க.
 

எ-டு :(துறைவன்) துறைவ கேள் ! எனவும் துறைவன் வருக ! எனவும்
வரும். "ஏனைப்புள்ளியீறு" என்றதனான்  நம்பன்  என்பது  நம்பான் என
ஈற்றயல் நீண்டு வருதலும் கொள்க.
 

சூ. 133 :

ஆன்என் இறுதி இயற்கை யாகும் 
(15)
 

க-து :

இதுவுமது.