வாழ்த்துரை
திருப்பணிச் செல்வர்
தவத்திரு காத்தையா சுவாமிகள் 

  

எனது   அன்பிற்குரிய    பாலசுந்தரம்    எழுதிய    தொல்காப்பியம்
சொல்லதிகாரம்   ஆராய்ச்சிக்   காண்டிகையுரை    யான்     வேண்டிக்
கொண்டவாறு விரைந்து வெளிவந்துள்ளதைப்  பார்த்து  மகிழ்ந்தேன்.  பிற
செய்திகளை எழுத்ததிகார வாழ்த்துரையில் சொல்லியிருக்கிறேன். அடுத்துப்
பொருளதிகார  உரையும்  உடன்  வெளிவர  அம்பிகை திருவருள் புரியப்
பிரார்த்திக்கிறேன்.  இவ்  உரை   நூல்களைத்   தமிழ்ப்   பெருமக்களும்
ஆய்வாளர்களும்   மாணாக்கர்களும்   வாங்கிப்   படிப்பதன்   வாயிலாக
இவருக்கு   ஊக்கமும்   ஆக்கமும்   அளிப்பார்களாக.   இவர்   மேலும்
பல்லாண்டுகள்  உடல்நலத்தோடு  இருந்து  முத்தமிழ்க்கும்  தொண்டாற்றி
மூவாப்புகழும்  ஓவா  ஆக்கமும்  பெற்று  வாழ  எல்லாம் வல்ல சவுந்தர
நாயகி    சமேத    சுந்தரேசப்   பெருமான்   திருவடிகளைப்   போற்றி
வாழ்த்துகிறேன், வாழ்க !
 

செ. காத்தையா
 

திரு. உலக. சுப்பிரமணியன்

இ. ஆ. ப. (ஓ) தஞ்சாவூர்
 

இறையருளால் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்களின் தொல்காப்பியச்
சொல்லதிகார ஆராய்ச்சிக் காண்டிகை, யான் எழுத்ததிகார வாழ்த்துரையில்
வேண்டியபடி விரைந்து வெளிவந்தமை  கண்டு  மகிழ்ந்தேன். எழுத்ததிகார
உரையைப்  போலவே   இதனுள்ளும்   பல   அரிய   விளக்கங்களையும்
ஆராய்ச்சிக் கருத்துக்களையும் படித்தறிந்து  உவந்தேன். தமிழ் வளர்ச்சியை
விரும்பும் பெருமக்கள் அனைவரும்  இவ்வுரை நூல்களை வாங்கிப் படித்து
இன்புற வேண்டுமென்பது என்  அவா.  விரைந்து பொருளதிகார உரையும்
வெளிவர  இறைவனை  வேண்டுகிறேன்.  பிற  செய்திகளை  எழுத்ததிகார
வாழ்த்துரையில்  கூறியிருக்கிறேன்.  பாவலர்  பல்லாண்டு  எல்லா நலமும்
பெற்று  மேலும்  நல்ல  பல தமிழ் தொண்டாற்ற விரும்பி வாழ்த்துகிறேன்.
வாழ்க.
 

யு. சுப்ரமணியன்