170விளி மரபு

உரை :ஆன்   என்னும்  இறுதி இடைச்சொல் பற்றி வரும் பெயரினது ஈறு திரியாது இயல்பாகவரும்.
 

எ-டு :சேரமான்    வருக !   மலையமான்    வருக !    எனவரும்.
"ஏனைப்புள்ளியீறு" என்றதனான்  அம்மான்  என்பது அம்மானே எனவும்
கன்னான்   என்பது   கன்னா எனவும்  வாயிலான் என்பது வாயிலோய் !
எனவும் வாயிலோயே ! எனவும் வருதல் கொள்க.
 

சூ. 134 :

தொழிலிற் கூறும் ஆன்என் இறுதி 

ஆய்ஆ கும்மே விளிவயி னான  

[16]
 

க-து :

இதுவுமது.
 

உரை:விளிவேற்றுமைக்கண்      ஆயினவாய்த்    தொழிற்சொல்லாற்
கூறப்பெறும் பெயரிறுதி ஆன் என்னும் ஈறு ஆய் எனத் திரிந்து வரும்.
 

எ-டு :உண்டான்,  தின்றான்  என்னும் வினையாலணையும் பெயர்கள்
உண்டாய்  வருக !  சென்றாய்  வருக ! எனவரும். உடையான், குழையான்
என்னும்   குறிப்பு   வினைப்   பெயரும்  உடையாய் ! குழையாய் !  என
வரும்.    "ஏனைப்புள்ளியீறு"    என்றதனான்,   உண்டான்  வருக  என
இயல்பாயும்   உண்டோய், தின்றோய்  என 'ஆய்'  'ஓய்' எனத் திரிந்தும்
வரும்.
 

சூ. 135 : 

பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே 
(17)
 

க-து :

இதுவுமது.
 

உரை:பண்படியாகத்    தோன்றி    வரும்    ஆனீற்றுப்   பெயரும்
தொழிலிற்   கூறும்   பெயரிலக்கணத்தொடு  ஒரு தன்மைத்தாம். என்றது ;
ஆன் ஆயாகத் திரிந்துவரும் என்றவாறு.
 

எ-டு :கரியான்    என்பது   கரியாய்   வருக !  எனவும் (நெடியான்)
நெடியாய் !    எனவும்  வரும். கரியான்   வருக !   என    இயல்பாயும்
கரியோய் ! எனத் திரிந்தும் வரும் எனக் கொள்க.
 

சூ. 136 :

அளபெடைப் பெயரே அளபெடை இயல 
(18)
 

க-து :

இதுவுமது.
 

உரை:  னகர ஈற்று அளபெடைப் பெயர்கள் இகர ஈற்று அளபெடைப்
பெயரியல்பினவாம்.