172விளி மரபு

உரை :ஆர்,  அர்   என்னும் இடைச் சொற்களை இறுதியாக உடைய ரகர    ஈற்று   உயர்திணைப்   பெயர்கள்   ஈர் என்பதனொடு பொருந்தி
விளியேற்கும். அர் ஆர் என்பவை ஈர் எனத் திரிந்து நிற்கும் என்றவாறு.
 

எ-டு :சான்றார்    என்பது    சான்றீர்   வருக !   எனவும், மாந்தர்
என்பது    மாந்தீர்   வருக !    எனவும்  கூத்தர்-கூத்தீர் எனவும் வரும்.
'ஏனைப்புள்ளியீறு' என்றதனான் மாந்தர் வம்மின் ! கூத்தர் வம்மின் ! என
இயல்பாக வருதலும்கொள்க.
 

சூ. 140 :

தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் 

வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே  

(22)
 

க-து : 

இதுவுமது.
 

உரை:  மேற்கூறிய    ரகர    ஈற்றுச்   சொற்கள்  தொழிலிற்  கூறும்
பெயர்களாயின்   அவற்றொடு ஏகாரம் வருதலும் குற்றமின்று எனக்கூறுவர்
வயங்கியோர்.
 

எ-டு :கற்றார்   என்பது  கற்றீரே வருக ! எனவும், உண்பார் என்பது
உண்பீரே    வருக !   எனவும்   வரும்.  ஒருசார்  பெயர்கள்  (வந்தவர்)
வந்தவரே   (சென்றவர்)   சென்றவரே    எனவருதலும்  கொண்டோரே !
உண்டோரே ! என ஆகாரம் ஓகாரமாகத் திரிந்து வருதலும் கொள்க.
 

"ஏனைப்    புள்ளியீறு"    என்றதனான் :-   நம்பியர்  -  நம்பியீரே;
நங்கையர் - நங்கையீரே   எனத்   தொழிற்    பெயரல்லாதன   ஏகாரம்
பெற்று    வருதலும்    பெண்டிர் -    கேளிர்   என்னும்   இயல்பீற்றுப்
பெயர்கள் பெண்டிரே - கேளிரே என ஏகாரம் பெற்று வருதலும் பெண்டிர்
வருக ! என இயல்பாக வருதலும்கொள்க.
 

சூ. 141 :

பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே 
(23)
 

க-து :

இதுவுமது.
 

உரை:பண்படியாகப்   பிறந்த   ரகார   ஈற்றுப்  பெயரும் அதனொடு
ஒருதன்மைத்தாம்.   என்றது, ஈறு திரிந்து   ஏகாரம்  பெறுதலும்  திரியாது
ஏகாரம் பெறுதலும் இயல்பாதலும் ஆகுமென்றவாறு.
 

எ-டு :கரியார்  - கரியீரே  வருக !  எனவும்  வெளியர் - வெளியரே
! எனவும் கரியார் வருக ! எனவும் வரும்.