விளி மரபு173

சூ. 142 :

அளபெடைப் பெயரே அளபெடை இயல 
(24)
 

க-து : 

இதுவுமது. 
 

உரை:  ரகார ஈற்று அளபெடைப் பெயர்கள் னகார ஈற்று அளபெடைப்
பெயர்களின்    இயல்பினவாம்.   அஃதாவது  திரிபின்றி  இயற்கையாகவே
விளியேற்றுவரும் என்றவாறு.
 

எ-டு :மகாஅர் வருக ! சிறாஅர் வருக ! எனவரும்.
  

சூ. 143 :

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன 
(25)
 

க-து :

இதுவுமது.
 

உரை:  அவர், இவர், உவர் என்னும்  ரகார  ஈற்றுச் சுட்டுப் பெயர்கள்
னகார ஈற்றுச் சுட்டுப்யெர்க்கோதி யாங்கு விளியேலா என்றவாறு.
 

சூ. 144 :

நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று 

அம்முறை இரண்டும் அவற்றியல் பியலும் 

(26)
 

க-து :

இதுவுமது.
 

உரை:  வேற்றுமை   ஏற்றற்குரியதாகிய  நும்  என்னும்  பெயரினின்று
திரிந்த    எழுவாய்ப்    பெயராகிய    நீயிர்    என்பதும், ரகார  ஈற்று
வினாப்பெயராகிய     யாவர்     என்பதும்      மேற்கூறிய     சுட்டுப்
பெயரியல்பாக நிகழும். என்றது ; இவையும் விளியேலா என்றவாறு.
 

சூ. 145

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே 

நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்  

 (27)
 

க-து :

லகார ளகார ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு கூறுகின்றது.
 

உரை :புள்ளியீறு    நான்கனுள்    எஞ்சிநின்ற  லகார  ளகார ஈற்று
உயர்திணைப்     பெயர்கள்     விளியேற்குமிடத்து    ஈற்றயல்   நின்ற
குற்றெழுத்துக்கள்      நீளுதல்     வேண்டும்.     அங்ஙனம்  நீளுதலே
விளிவேற்றுமையாம் என்றவாறு.
 

எ-டு :(குரிசில்)    குரிசீல்    வருக !    (தோன்றல்)    தோன்றால்
வாழ்க!    எனவும்   (மக்கள்)   மக்காள்  காண்மின் ! (அடிகள்) அடிகாள்
கேண்மின் !     எனவும்   வரும்.  "ஏனைப்   புள்ளியீறு"  என்றதனான்
குரிசில் வருக ! அடிகள் வருக ! என இயல்பாயும், தாழ்