விளி மரபு175

சூ. 148 :

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல 
(30)
 

க-து :

ளகர ஈற்று முறைப் பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. 
 

உரை :ளகார    ஈற்று    முறைப்  பெயர்கள்  னகார ஈற்று முறைப்
பெயரியல்பினவாய்   ஏகாரம்   பெற்று   வரும்.   எ-டு : (மகள்)  மகளே
வாழ்க ! மருமகளே வருக ! எனவரும்.
 

சூ. 149 :

சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் 

மேற்கிளந் தன்ன என்மனார் புலவர்  

(31)
 

க-து :
 

ளகர    ஈற்றுச்    சுட்டுப்பெயரும் வினாப்பெயரும் விளியேலா
என்கின்றது.
 

உரை:  சுட்டெழுத்துக்களை   முதலாகக்  கொண்டுவரும் ளகர ஈற்றுச்
சுட்டுப்    பெயர்களும்    ளகர   ஈற்று   வினாப்  பெயரும் மேல் னகர
ஈற்றிற்குக் கூறிய தன்மையவாம். என்றது, இவையும் விளியேலா என்றவாறு.
 

சூ. 150 :

அளபெடைப் பெயரே அளபெடை யியல 
(32)
 

க-து : 

லகர   ளகர ஈற்று   அளபெடைப்   பெயர்கள் விளி ஏற்குமாறு
கூறுகின்றது.
 

உரை :லகார   ளகார    ஈற்று   அளபெடைப் பெயர்கள் ரகாரஈற்று
அளபெடைப்   பெயரியல்பினவாம்.   அஃதாவது   திரியாது    இயல்பாக
விளியேற்கும்   என்றவாறு.    எ-டு : மாஅல்   வருக !  வேஎள் வருக !
எனவரும்.
 

சூ. 151 :

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் 

விளம்பிய நெறிய விளிக்குங் காலை  

[33]
 

க-து : 

அஃறிணைப்    பொருளுணர்த்திவரும்    விரவுப்    பெயர்கள்
விளிஏற்குமாறு கூறுகின்றது.

  

உரை :உயர்திணைப்    பெயர்க்கண்    விளிகொள்ளுதற்குரியனவாக
எடுத்தோதப்    பெற்ற    இறுதிகளையுடையவாய்    வரும்   அஃறிணை
விரவுப்பெயர்கள்       விளிக்கப்படுமிடத்து      அவ்வவ்      ஈறுபற்றி
உயர்திணைப் பெயர்கட்குக் கூறிய நெறியினவாகும்.
 

கிளந்த இறுதியாவன, இ உ ஐ ஓ  என்னும்   உயிரீறுகளும் ன ர ல ள
என்னும்   புள்ளியீறுகளுமாம். ஆண்டு   அவற்றிற்குக் கூறிய விதிகளொடு
விதப்பானும்  உத்தியானும் கொண்ட விதிகளுள்   ஏற்பன    இவற்றிற்கும்
கொள்க.