விளி மரபு177

நிற்றலானும்    உயிரீறுகளுள்    எகர    ஒகரங்கள்   பெயர்க்கு  ஈறாகா
என்றமையானும்   ஒளகாரம்   முதனிலை  வினையாகவன்றிப்  பெயரீறாக
வாராமையானும்   அவை   ஒழிந்த    ஏனைய   ஈறுகளே    கொள்ளல்
வேண்டுமென்பதும்,  குற்றியலுகரம்  உகரத்துள்   அடக்கப்பட்டதென்பதும்
உய்த்துணர்ந்து கொள்க.
 

எ-டு :விள,  விளவே !  புறா,   புறாவே !   புலி, புலியே ! தீ, தீயே
! முசு,   முசுவே ! வண்டு, வண்டே ! பூ, பூவே ! மரை,   மரையே !, சோ,
சோவே !   என   உயிரீற்று  அஃறிணைப் பெயர்கள் வரும் (முசு-குரங்கு;
சோ - அரண்) மண், மண்ணே ! வெரிந் -  வெரிநே !   மரம்,   மரமே !
கடுவன்,     கடுவனே !    புல்வாய்,   புல்வாயே ! தகர், தகரே ! குயில்,
குயிலே ! பறழ்,    பறழே !    உதள்,   உதளே  !   எனப்  புள்ளியீற்று
அஃறிணைப் பெயர்கள் வரும். (வெரிந்  - முதுகு; பறழ்  - பறவைக்குஞ்சு;
உதள்-ஆடு)
 

இனித், "தெளிநிலை   உடைய" என்றதனான்.  வருந்தினை வாழி என்
நெஞ்சம் !  கருங்கால் வெண்குருகு  ஒன்றுகேண்மதி !  என  இயல்பாயும்
மந்தி-மந்தீ !  என   இகரம்   ஈகாரமாயும்,   நாரை  !    நாராய்  என
ஐகாரம் ஆய் ஆகியும் அலவன் - அலவ ! என ஈறு குன்றியும்  குறுமுயல் - குறுமுயால் ! ஏன   ஈற்றயல் நீண்டும் பிறவானும் சான்றோர் வழக்கினுள்
வருவன கொள்க.
 

சூ. 153 : 

உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் 

அளபிறந் தனவே விளிக்குங் காலை 

சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான  

[35]
 

க-து :

மூவகைப்   பெயர்கட்கும்   எய்தியதன்மேற்   சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

உரை:  விளிகோடற்குரியன   என   மேல்விதந்து கூறப்பட்ட எல்லாச்
சொற்களும் சேய்மை இடம் பற்றி இசைக்கும் வழக்கின்கண் விளிக்குமிடத்து
அளபிறந்தனவாம்.
 

அளபிறந்தன  என்றது  உயிரீறாயின் அவற்றின் மிக்கும் புள்ளியீறாயின்
அவற்றின்   அயல்நின்ற   உயிர்மிக்கும்   சேய்மைக்கேற்ப    இசைக்கும்
என்றவாறு.
 

எ-டு :(நம்பி)   நம்பீஇ !    நம்பீஇஇ !    (ஆடூ)  ஆடூஉ ! சாத்தா,
சாத்தாஅ,   மலையமான்,    மலையமாஅன், (மால்)  மாஅல் -மாஅஅல் !
எனவும்   (தொழீஇ) தொழீஇஇ ! (குரீஇ) குரீஇஇ !   எனவும்  விளவேஎ !
புறவேஎ ! எனவும் வரும்.