180பெயரியல்

தாகிய    பெயர்ச்சொற்களின்   இலக்கணம்    கூறுதலின்  இவ்வோத்துப்
பெயரியல் என்னும் பெயர்த்தாயிற்று.
 

பெயர்ச்சொல்லியல்    என்பது   பெயரியல்  எனக் குறைந்து நின்றது.
ஏனைய  வினையியல், இடையியல், உரியியல்  என்பவற்றையும்  இவ்வாறே
கொள்க.   பெயர்   என்பது   பெய் + அர்  (ஆர்)   என்னும்  இரண்டு
உரியடிகளான்  ஆக்கமுற்று மருவியதோர் ஒட்டுச் சொல். இதன்  பொருள்
பெய்து நிரப்புதல் என்பதாம்.
 

பொருளை     நோக்கி    எழும்    உணர்வும்,    பருப்பொருட்கும்
நுண்பொருட்கும்  உள்ள  இயைபும், மொழிப்  பொருட்குக் காரணமாதலின்
சொற்கள்   யாவும் காரணத்தை   அடிப்படையாகக்   கொண்டனவேயாம்.
உணர்வை அடிப்படையாகக்   கொண்டு  இருதிணைப் பொருளையும் சுட்டி
வழங்குதற் கிடப்பெறும் குறியீடுகளே பெயர்ச்சொல் எனப்படும் என்க.
 

சூ. 156 :

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 
(1)
 

க-து :

சொற்களின் பொதுவியல்பு கூறுகின்றது. 
 

உரை :பெயர்வினை  இடைஉரி  என்னும்  நால்வகைச்   சொற்களும்
பொருள் குறித்து நிற்பனவேயாம். ஏகாரம் தேற்றம்.
 

எ-டு :நிலம்,    நீர்,    தீ,    வளி,   வான்,   நம்பி, நங்கை, புள்,
விலங்கு,   மரம்,  மலர்,   செம்மை,  கருமை, உண்மை, நன்மை எனவும்;
உண்டான்,   உண்டது,    கரியன்,    கரியது     எனவும்,  கொன்(னூர்)
(பண்டுகாடு)     மன்    (கேண்)    மதி   எனவும்,   உறு  (கால்) தவப்
(பெரியன்) எனவும் வரும்.
 

இடைச்சொல்லும்   உரிச்சொல்லும்   பெயர்   வினைகளைச்  சார்ந்தே
பொருளுணர்த்துமென்பது   இலக்கணமாதலின்  அவற்றைச் சார்ந்து நின்று
தம்    பொருளுணர்த்தியவாறு    கண்டு     கொள்க.    இடங்குறித்தும்,
சீர்நிறைத்தும்    இசை    நிறைத்தும்     வருதலின்      இசைநிறை  -
அசைநிலையாக   வரும்  இடைச்சொற்களும் பொருளுணர்த்துவனவேயாம்.
சொல்   பொருள்   குறித்தன  எனக்   கருவி  கருத்தாவாக ஓதப்பட்டது.
"ஆயிருதிணையின்   இசைச்குமன   சொல்லே"    (கிளவி-1)    என்பது
சொற்களின்       கூறுபாடுணர்த்திற்று.      இச்சூத்திரம்   அச்சொற்கள்
பொருள்குறித்தே வரும் என இலக்கணங் கூறிற்று என்க.
 

இது    தனிமொழிப்  பற்றிய   இலக்கணமாதலின், முயற்கோடு, யாமை
மயிர்க்கம்பலம் முதலிய தொகை மொழி - தொடர்மொழி