வினையெச்சங்கள் வருதல்போல ஒருவர் என்ற முற்று வருதலுக்கு எடுத்துக்காட்டு எதுவும் தரப்பெறவில்லை. மேலும் பெயரியலில் வினைமுற்றைப் பற்றிக் குறிப்பிட இடனில்லை.24 |
சூ. 196:கிழவன், பெரியர், கிழவோன், கிழவோர் என்ற ஆட்சி உண்டு. ஆனால் கிழவோள் என்ற ஆட்சி உண்டு; கிழவள் என்னும் ஆட்சியில்லை. அதனைக் கொள்வதற்கு அஃது ஆளப்பட்ட இடம் ஒன்றனையாவது சுட்டியிருத்தல் வேண்டும்.25 |
சூ. 197:இறைச்சி என்பதற்கு உள்ளுறை என்று பொருள் கொள்ளப்பட்டமையால் நூற்பா உரையில் எந்தத் தனிச் சிறப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்த நூற்பா வினையும் நோக்க இறைச்சி என்பதற்குக் கருப்பொருள் என்பதே நேரிய பொருளாகத் தோன்றுகிறது.26 |
சூ. 203:தலைதடுமாற்றமாகத் தன்மைப்பன்மைவினை முற்கூறினார். தன்மைவினை உயர்திணைக்கே உரியதென்பது அறிவித்தற்குத் (பக்.221) தன்மைப்பன்மைவினை அஃறிணையையும் உளப்படுத்தல்- "தன்மைச் சொல்லே" "பன்மையுரைக்கும் தன்மைக்கிளவி" என்ற நூற்பாக்களால் வெளிப்படை. எனவே மேலே குறிப்பிட்ட விளக்கம் பொருந்துவதாக இல்லை.27 |
சூ. 204:உண்டு, வந்து, சென்று. உண்டும், வந்தும், சென்றும் என்பவை இறந்தகாலம் காட்டும் என்பார் பவணந்தியார். அங்ஙனம் வருதல் சான்றோர் செய்யுட்கண் காணப்பெறாமையின் அவை ஆய்வுக்குரியன என்கிறார். (பக்-223, 4) உண்ணாநின்றனம், உண்கின்றனம் முதலியவை (பக்-228) நிகழ்காலம் பற்றிக் கின்று, நின்ற என்ற கால எழுத்துப் பெற்று வரும் வினைமுற்றுக்கள் சான்றோர் செய்யுட்கண் காணப்பெறுகின்றனவா என்பது ஆய்வுக்குரியது.28 |
|
24. ஒருவர் என்னும் பெயர் நிலைக்கிளவி என ஆசிரியர் விதந்தமையான் அங்ஙனம் விளக்கம் கூறப்பட்டது. |
25. 'கிழவோள்' என்னும் ஈற்றயல் நீண்ட பெயருக்குரிய அடிப்படை வடிவம் 'கிழவள்' எனச் சுட்டப்பட்டது. |
26. இறைச்சி ஐவகை உள்ளுறைகளுள் ஒன்றென்பதும் அதன் இலக்கணமும் பொருளியலுள் விளங்கும். |
27. தன்மை வினை உயர்திணைக்கே உரியதென்பதனை நினைவுபடுத்தல் இதன் நோக்கமாகலாம் என்பது எனது கருத்து. |
28. உண்ணா நின்றனம் முதலியவை வழக்கிலாயினும் உள, உண்டு-உண்டும் என்பவை இருவகை வழக்கினும் காணல் அரிதாயுள்ளமையின் அங்ஙனம் சுட்டினாம். |