பெயரியல்209

உரை:தாம்    என்னும்    பொதுப்பெயர்     இருதிணைக்கண்ணும்
பன்மைப்பாலுக்கு உரித்தாய் வரும்.
 

எ-டு :தாம்  வந்தார்,  தாம்   வந்தன  எனவும்  தாம்பலர்  -  தாம்
பல எனவும் வரும்.
 

சூ. 186 :

தானென் கிளவி ஒருமைக் குரித்தே
(31)
 

க-து :

தானென்னும்  பொதுப்பெயர்  இருதிணைக்கண்ணும்    வருமாறு
கூறுகின்றது.
 

உரைதான்   என்னும்     பொதுப்பெயர்    இருதிணைக்கண்ணும்
ஒருமைப்பாலுக்கு உரித்தாய் வரும்.
 

எ-டு : தான் வந்தான், தான்  வந்தாள்,  தான்  வந்தது எனவும் தான்
ஒருவன், தான் ஒருத்தி, தான் ஒன்று எனவும் வரும்.
 

சூ. 187 :

எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே

[32]
 

க-து :

எல்லாம்  என்னும் பொதுப்பெயர் இருதிணைக்கண்ணும் வருமாறு
கூறுகின்றது.
 

உரை : எல்லாம்   என்னும்   பெயர்நிலைமையாகிய    பொதுச்சொல்
பன்மைப் பாலைக்கருதிய நிலைமைத்தாகும்.
 

இப்பொதுப்பெயர்  உயர்திணைக்கண்   வருங்கால்   தன்மைப்பன்மைக்
கண்ணும்   அஃறிணைக்கண்   வருங்கால் படர்க்கைப்பன்மைக்  கண்ணும்,
முன்னிலைப்பன்மைக்  கண்ணும் வருதலின் பன்மை   என்னாது "பல்வழி"
என வாய்பாடு வேறுபடுத்திக் கூறினார் என்க.
 

எ-டு : எல்லாம் வந்தேம்  எனவும்  எல்லாம் வந்தன-எல்லாம் வந்தீர்,
எனவும்  வரும், எல்லாம்  யாம்-எல்லாம்  அவை, எல்லாம் நீயிர் எனவும்
வரும்.
 

எல்லாம்  என்னும் சொல்   தலையெல்லாம் நொந்தது. மேனி எல்லாம்
பசந்தது என  எஞ்சாப்  பொருட்டாய்   வருமிடத்து   அஃது உரிச்சொல்
நிலைமை  எய்துதலின் "பெயர்நிலைக் கிளவி"  என்றார். எல்லாம் என்னும்
உரிச்சொல்வேறு-எல்லாம்   என்னும்   பெயர்வேறு.   உரிச்சொல்லாயவழி
ஒருமை   வினையான்  முடியும்-பெயராயவழி  பன்மையான்  முடியும் என
அறிக.