சூ. 199 : | வினை எனப் படுவது வேற்றுமை கொள்ளாது |
| நினையுங் காலைக் காலமொடு தோன்றும் |
(1) |
க-து : | எல்லா வினைச்சொற்கும் உரிய பொதுவிலக்கணங் கூறுகின்றது. |
|
உரை:வினைச்சொல் என்று கூறப்படுவது வேற்றுமை கொள்ளாது, ஆராயுங்காலத்துக் காலத்தொடு விளங்கி நிற்கும். வேற்றுமையாவது வேற்றுமையியலுள் கூறிய எண்வகை வேற்றுமை நிலைகள். வேற்றுமை கொள்ளாது என்றதனான் உருபேலாமை தாமே பெறப்படும். |
வினையாலணையும் பெயரை நீக்குதற்கு வேற்றுமை கொள்ளாதென்றும் இடைச்சொல் உரிச்சொற்களை நீக்குதற்குக் காலமொடு தோன்றும் என்றும் கூறினார். குறிப்பு வினைக்கண்ணும் எதிர்மறை வினைக்கண்ணும் காலம் தெற்றெனப் புலப்படாமையின் 'நினையுங்காலை' என்றார். |
எ-டு : உண்டான், உண்டது எனவும், கரியன், கரியது எனவும் வரும். உண்ணான், உண்ணாது என எதிர்மறை வினைவரும். ஏனைப் பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க. |
சூ. 200 : | காலந் தாமே மூன்றென மொழிப |
(2) |
க-து : | மேற்கூறிய காலத்தின் தொகை கூறுகின்றது. |
|
உரை:காலமொடு தோன்றும் எனப்பெற்ற அக்காலம் மூன்று கூறுபடுமெனக் கூறுவர் தொன்னூலாசிரியர். தாமே என்பது அடிநிரப்பவந்த அசைச்சொல். காலமாவது 'பொருள் நிகழ்வு உரைப்பது' (செய்-194) என்பாராகலின் இச்சூத்திரம், மொழிவாம் என்னும் உத்திக்கு இனம். |
காலம் என்னும் சொற்குப் பொருள், இடையறாது செல்வது என்பதாகும். கலித்தலைச் செய்வது காலம். இஃது கால் எனவும் காலை எனவும் வழங்கும். |
சூ. 201 : | இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா |
| அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும் |
| மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே |
(3) |
க-து: | மேற்கூறிய காலங்களின் பெயரும் அவை வினைச் சொற்களிடத்துத் தோன்றும் முறைமையும் கூறுகின்றது. |
|
உரை : இறப்பின் கண்ணும், நிகழ்வின் கண்ணும், எதிர்வின் கண்ணும்வரும் அம்மூன்று காலமும் வினைச் சொற்களுள் |