முதல் இரண்டடிகள் வரும் வழிக்கு அடைமொழியாக அமைதல் காண்க.
 

சூ. 413:நிலங்கடந்தான்   முதலியன   உருபு   தொகையாக   வரும்
தொடர்மொழிகளாகலாம்.  கடிசூத்திரப்பொன்    என்பது    தாலிப்பொன்
என்றாற்போல வரும் தொகைச்சொல் அன்றோ? (பக்-367).
 

சூ. 414:புலிப்பாய்த்துள்     அஞ்சத்தக்கது.     அவன்      செலவு
புலிப்பாய்த்துள்.   மழை  வண்கை   புகழ்தரும்  பாரியின்  பண்பு  மழை
வண்கையே என இவற்றைத் தொகை மொழிகளாகக் கொள்வதன்கண் தவறு
என்ன? (பக். 369).39
 

சூ. 419:"வேற்றுமை     தொகையே     வேற்றுமையில"    முதலிய
நூற்பாக்களால்  தொகைகளின்   இலக்கணமே   கூறப்பட்டது.  மொழிகள்
எவ்வாறு  பிரிந்து  பொருளுணர்த்தும்  என்பது  ஆசிரியர்  நோக்கமன்று.
(பக். 370)    என்றார்.   விரிந்து   பொருளுணர்த்துமாற்றை   அறியாமல்
தொகைகளுள்  பொருள்   சிறந்து  நிற்குமிடங்களை  அறிதல்  யாங்ஙனம்
இயலும்.40
 

சூ. 415:மாதவி  ஆடரங்கிற்கு வந்தாள். மாதவியை ஆடரங்கிற்காண்க,
மாதவி  ஆடரங்கிற்குச்  செல்வாள் என்புழி வந்தாள், காண்க - செல்வாள்
என்ற வினைமுற்றுக்களே  ஆடரங்கு என்ற வினைத்தொகையில் காலத்தை
வெளிப்படுக்கின்றன.  நெருநல்  அடுகளிறு  போன்றவற்றில்  காணப்படும்
குறை இவ் எடுத்துக்காட்டுக்களிலும் காணப்படுதல் அறிக. (பக். 372)41
 

சூ. 417:'உம்மை  இடைச்சொல் தொகையொடு முடிதலானும்' என்றார்.
உம்மைத்தொகையொடு  முடிதல்  வேண்டும்  என்ற  வரையறை  இன்மை
288ஆம் நூற்பாவான் உணரப்படும்.42


39. 413, 414  தொகைமொழி   -  தொகைநிலைத்   தொடர்   இவை
பொருள்கொள்ளும் கோணத்திற்கு ஏற்பத் தடுமாறி வரும்.
 

40. விரித்துப்பொருள்   காணல்     தொகையமைப்பினை    அறிந்து
கொள்ளவே என்பது அவ்விளக்கத்தின் கருத்தாகும்.
 

41. ஒரு   காலத்தை,    வரைந்துணர்தலை    விளக்குதற்குத்    தந்த
எடுத்துக்காட்டுக்கள்  மாதவி  வந்தாள்  முதலியவை.  நெருநல் அடுகளிறு
முதலியவை  அக்கோணத்திற்  காட்டப்பட்டவை  அல்ல  என்பது  எனது
கருத்து.
 

42. எண்ணும்மையை  வரைந்து  சுட்டும்   என்பதற்கே   இவ்விளக்கம்
தரப்பட்டது. உம்மையின் இயல்பு பற்றியதன்று.