இடைச்சொல்லாவது : பெயர்ப்பொருளையும் வினைப்பொருளையும் வேறுபடுத்தும் இயல்பினதாய் அவற்றின் வழிமருங்குதோன்றி அவற்றொடு ஒருங்கு நடைபெற்றியல்வதாகும். அவற்றுள் ஒரு சாரன பெயரும் வினையுமாகிய சொற்களினின்று திரிந்தும், சிதைந்தும், சுருங்கியும் இலக்கணக் குறியீடாக அமைந்து இடுங்கிய சொற்களாக வருதலானும், ஒருசாரன பெயருமாகாமல் வினையுமாகாமல் அவற்றிற்கு இடைப்பட்டனவாக வருதலானும், ஒருசாரன திணைபால் இடம் கால முதலியவற்றைக்காட்டுதற்குரிய உறுப்பாக இடப்படுதலானும், இடைச்சொல் என்னும் காரணக்குறியீடு பெற்றன. ஆதலின், இடை, என்னும் சொல் இடுங்குதல், இடை நிகர்த்தல், இடப்படுதல் என்பவற்றிற்குப் பொதுவாக நின்றது. |
புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதவுவனவாய் வரும் சாரியைகளுள் பலவும், வேற்றுமையுருபுகளுள் பலவும் பெயர், வினைகளின் இடுங்கிய சொற்களாயும். கொன், தஞ்சம் அந்தில் முதலியவை பெயர்ப்பொருட்டாயும் வினைப்பொருட்டா |