280இடையியல்

க-து :

இடைச்   சொற்கள்   பெயர்   வினைகளை   அடுத்து  வரும்
முறைமையும் பிற இயல்புகளும் ஆமாறு கூறுகின்றது.
 

உரை:மேல்  வகைப்படுத்தப்  பெற்ற இடைச் சொற்கள் பெயரொடும்
வினையொடும்  நடைபெறுங்கால்  அவற்றின்  முன்னர் வருதலும், பின்னர்
வருதலும்,   தம்    ஈறுதிரிந்து     வருதலும்    பிறிதோ   ரிடைச்சொல்
அவண்வந்து   இணைய   நிற்றலுமாகிய  அத்தகைய   இயல்புகளெல்லாம்
உறுதற்குரிய, எனக் கூறுவர் ஆசிரியர்.
 

எ-டு : பண்டுகாடுமன் - கேண்மியா;   இவை   முன்னடுத்து நின்றன.
கொன்னூர் - ஓஒ இனிதே; இவை பின்னடுத்தன. உடனுயிர் போகுகதில்ல
- தில்   என்பது   ஈறுதிரிந்து   வந்தது. வருகதில்லம்மஎம் சேரிசேர -
பிறிதவண்வந்து இணைந்து நின்றது.
 

"அன்னவையெல்லாம்"  என்றதனான்,   மன்னைச்  சொல்,   தில்லைச்
சொல் எனத் தம்மை உணரநின்ற  வழியும்  ஈறுதிரிதலும்,  னகாரை   என
எழுத்துச் சாரியை ஈறுதிரிதலும்  வேற்றுமை  யுருபுகளுள்  காவ  லோனக்
களிறஞ் சும்மே என ஐகாரம் முழுவதும் திரிதலும் பிறவும் கொள்க.
 

சூ. 253 :

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று

அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே 

(4)
 

க-து:

இவ்வியலுள்  உணர்த்தப்படும்   மூவகை  இடைச்  சொற்களுள்
தத்தங்  குறிப்பிற் பொருள் செய்வன பொருளுணர்த்தும் சிறப்பும்
அவற்றின்  பன்மையும் நோக்கி அவற்றை முதற்கண் உணர்த்தத்
தொடங்கி   இச்சூத்திரத்தான்  'மன்'  என்னும்   இடைச்சொல்
பெற்று  வரும் பொருட் குறிப்பு இவை எனக் கூறுகின்றார்.
 

உரை:'மன்'  என்னும்   இடைச்சொல்,   செயற்கழிவும்    ஆக்கமும்,
எச்சமாக  ஒழிந்து   நிற்கும்   பொருண்மையும்  என்று    சொல்லப்பட்ட
அம்மூன்று பொருட் கூறுபாட்டினை உடையதென்று கூறுவர் புலவர்.
 

எ-டு : சிறியகள்  பெறினே  எமக்கீயுமன்னே:  இது  கழிந்த  பொருள்
சுட்டி    நின்றது.    பண்டுகாடுமன்   (இப்பொழுது  வயலாயிற்று)   இது
ஆக்கங்குறித்து நின்றது. கூரியதோர்  வாள்மன்  (இப்பொழுது திட்பமின்று)
இது ஒழிந்த சொற்பொருண்மை சுட்டி நின்றது.