சூ. 254 : | விழைவே காலம் ஒழியிசைக் கிளவிஎன்று |
| அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே |
[5] |
க-து : | தில் என்னும் இடைச்சொல்லின் பொருட்குறிப்பு இவை என்கின்றது. |
|
உரை : தில் என்னும் இடைச்சொல் விழைவும், காலமும், ஒழிந்து நிற்கும் சொற்பொருண்மையும் என்று சொல்லப்பட்ட அம்மூன்று பொருட்கூறுபாட்டினை உடையதென்று கூறுவர் புலவர். |
எ-டு : சின்மொழி அரிவையைப் பெறுகதில் அம்மயானே : இது பெறுதல் வேண்டும் என்னும் விழைவு குறித்து நின்றது. பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே - இது காலங்குறித்து நின்றது. 'வருகதில் லம்மவெம்சேரிசேர' - இது வரின் இன்னது செய்வல் எனஒழியிசைப் பொருண்மை குறித்து நின்றது. |
சூ. 255 : | அச்சம் பயமிலி காலம் பெருமையென்று |
| அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே |
(6) |
க-து: | 'கொன்' என்பதன் பொருட்குறிப்பு இவை என்கின்றது. |
|
உரை:'கொன்' என்னும் இடைச்சொல் அச்சம், பயனின்மை, காலம், பெருமை என்றுசொல்லப்படும் அந்நான்கு பொருட் கூறுபாட்டினை உடையதாம். |
எ-டு : கொன்முனை யிரவூர் (குறு-91) கொன்னே கழிந்தன்றிளமை (நால - 55) கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ - கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே (குறு - 138) எனமுறையே அப்பொருள் நான்கினும் வந்தமை கண்டு கொள்க. |
சூ. 256 : | எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை |
| முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று |
| அப்பால் எட்டே உம்மைச் சொல்லே |
(7) |
க-து: | உம்மை இடைச்சொல்லின் பொருட்குறிப்பு இவை என்கின்றது. |
|
உரை:உம் என்னும் இடைச்சொல் எச்சமும், (இழிவும் உயர்வும் குறித்து வரும்) சிறப்பும், ஐயமும், எதிர்மறையும், முழுமையும், எண்ணும், ஆய்வுநிலையும், ஆக்கமும் என்று சொல்லப்படும் அவ் எட்டுப் பொருட்கூறுபாட்டினையுடையதாம். |