செவ்வெண்ணின்கண் உருபுதொக்குவருதல் "பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்" (வேற்-மய-21) என்பதனாற் பெறப்பட்டமையின் "குன்றி கோபம் கொடிவிடு பவளம்" என்றாற் போல்வனவற்றை ஈண்டு உதாரணமாகக் காட்டுதல் பொருந்தாதென்க. |
பிறஎண்ணின்கண் உருபு தொகுதல் வரையப்படும் என்பது அறிவித்தற்கு இதனை வேற்றுமையியல்களுட் கூறாது ஈண்டுக் கூறினார் இடைச் சொல்லாதல் ஒற்றுமையான் என அறிக. |
சூ. 293 : | உம்உந் தாகும் இடனுமா ருண்டே |
(44) |
க-து: | உம் ஈறுதிரிந்து நிற்கும் இடனுமுண்டு என்கின்றது. |
|
உரை:வினைச்சொல்லிறுதியாய் நிற்கும் உம்மீறு உந்து என வடிவு திரிந்து நிற்கும் இடனும் உண்டு. உம்மை எதிர்மறை-ஆரும் ஏயும் அசைநிலை. |
எ-டு : "நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து"--"நாரரி நறவின் நாண் மகிழ் தூக்குந்து"-எனவரும். |
இவ்வும்மை வினைசெயல்மருங்கின். காலமொடு வரும் இடைச் சொல்லாகும். 'இடனுமாருண்டே' என்றதனான் திரியுமிடம் சிறுபான்மையாதல் புலப்படும். 'இவ்உம்மை செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்தினது என்பது ஏற்புழிக் கோடலான் உணரப்படும். |
பொருள் வேறுபடாமல் வடிவுமட்டும் வேறுபடுதலின் "தம்மீறு திரிதலும்" என்னும் விதிபற்றி இடையியலுள் இதனை வைத்தார். எண்வகைப் பொருட்குறிப்பு ஏற்றுவரும் உம்மை இடைச்சொல் வேறு; வினைசெயன்மருங்கிற் காலமொடு வரும் இவ்உம்மை இடைச்சொல் வேறென அறிக. |
சூ. 294 : | வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா |
| நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே |
(45) |
க-து: | எண்ணிடைச்சொற்கள் வினையொடும் வருமென்கின்றது. |
|
உரை:எண்ணிடைச் சொற்கள் பெயரொடு வருதலேயன்றி வினைச்சொல்லொடு கூடி நிற்பினும் எண்ணுதலாகிய தம் இலக்கணத்திற்றிரியா, ஆண்டு அவ்வவற்றின் இயல்பினை ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும். |