சொல்லினக் கோட்பாடுகள்7

உரியனவாகும். அவை  விரவுப் பெயராக  வரா,  அன், ஆன், அள், ஆள்
என்னும்  ஆண்மை  பெண்மை உணர்த்தும்  இறுதி இடைச் சொல்லொடும்
பெண்பால் உணர்த்தும் இகர இறுதியொடும் கூடிவரும் பெயர்ச் சொற்களும்
கள்  விகுதி  பெறாமல்  வரும்  அஃறிணை   இயற்பெயர்ச்   சொற்களும்
முன்னிலைப்  பெயர்களும்  உறவு  முறைப் பெயர்களுமே விரவுப்பெயராக
வரும்.   ஆதலின்,   ஆண்மை   பெண்மை   உணர   நிற்கும்   இறுதி
இடைச்சொல்லொடு     கூடிய      பெயர்களும்     முறைப்பெயர்களும்
இருதிணையுள்ளும்  அவ்வப்பால்களுக்கு  உரியவாய்  விரவும்.  ஆண்மை
பெண்மை  உணர  நில்லாத  இயற்பெயர்கள்  உயர்திணையுள் ஆண்மைப்
பொருள் பெண்மைப் பொருள் அஃறிணையுள் ஒருமைப் பொருள் பன்மைப்
பொருள்  என்னும்   நான்கனோடும்   விரவும்.   இவற்றை   ஆண்மைப்
பொதுப்பெயர்,  பெண்மைப்   பொதுப்பெயர்  ஒருமைப்   பொதுப்பெயர்,
பன்மைப் பொதுப்பெயர் எனக் குறியீடு செய்துணர்த்துகின்றார் ஆசிரியர்.
 

இடம்: யாதானும்  ஒன்றைப்  பற்றி  உரைநிகழ்த்தும் பொருள் தன்மை
இடமாகும். அதனை எதிர் நின்று கேட்கும் பொருள் முன்னிலை இடமாகும்.
எப்பொருள்  பற்றிப் பேசப்படுகின்றதோ அப்பொருள் படர்க்கையிடமாகும்.
அதனான் இடம் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது.
 

நாடக வழக்குப்பற்றிய கற்பனை  வகையால் புலவோர் கொண்டெடுத்துக்
கூறுவதல்லது      அஃறிணைப்     பொருள்கள்     பேசுந்திறனுடையன
அல்லவாகலின், பேசிப் பொருள்உணர்த்தும் ஆற்றலுடைய உயர்திணைக்கே
தன்மைஇடம்  உரியதாகத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகின்றது. இவ்
அறிவியல்  நுண்மையை  இகந்து   இடைக்காலத்து   இலக்கண   நூலார்
தன்மையை விரவுத் திணையாகக் கொண்டனர். முன்னிலை இருதிணைக்கும்
பொதுவாக  நிற்கும் - படர்க்கை  இருதிணையுள் ஒன்றை வரையறுத்துணர
நிற்கும்.    அஃறிணைப்    பொருட்களுக்குக்     கேட்கும்     ஆற்றல்
உண்டென்பதனால் முன்னிலை இருதிணைப் பொதுவாயிற்றென்க.
 

வேற்றுமை:
 

பெயர்ப்பொருள்  தன்னானும்  பிறிதானும்   கொள்ளும்   வினைநிலை
காரணமாக  எய்தும் வேறுபாடுகளே வேற்றுமையாகும். அவ்வேறுபாடுகளை
எட்டு  வகையாக அமைத்துக்கொண்டனர் தமிழ் நூலார். இரு திணைகளுள்
ஒரு பொருள் வினைநிலை எய்திக் கருத்துக்