சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

95

அப்பொருள்       விளங்காமையின்      அந்நிகரன    இறுதிக்கண்
தொகாவாயின.   “நாணிலமன்ற”   (35)   என்னும்  குறுந்தொகையுள்
“பிரிந்திசினோர்க்கு  அழல்”  என  ஆனிறுதிக்கண் தொக்குநின்றதால்
எனின்  அந்நிகரன   வழக்கினுள்   இன்மையின்  செய்யுள்  விகாரம்
என்க.                                                 (22)

உருபுகள் ஒரோவழித் தம் பொருண்மையின்றி
மயங்குமெனல்
 

108.

யாதன் உருபின் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.
1

 

என் -  எனின், உருபுகள்  ஒரோவழித்  தம்  பொருண்மையின்றி
மயங்குதலுடைய என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஒருபொருண்மை     யாதானும்    ஓர்   உருபினால்
கூறப்பட்டதாயினும்      அப்பொருண்மை      அவ்வுருபினதாகாது
அப்பொருள்  செல்லும்  கூற்றினையுடைய  வேற்றுமை ஆண்டுவந்து
சார்ந்த அப்பொருளினைக் கொள்ளும், (எ - று.)

(எ - டு.) “கிளியரி  நாணற்  கிழங்குமணற்  கீன்ற,  முளையோ
ரன்ன   முள்ளெயிற்றுத்    துவர்வாய்”    (அகம்  212)   என்னும் 
பாட்டினுள், மணலுள் ஈன்ற என்பது மணற்கீன்ற என்றாயிற்று.

இவ்வாறு       பொருளன்றியும்      மயங்கும்     என்றதால்
வேண்டியவாறெல்லாம்   வரப்பெறும்   என்றவாறாம்  பிற  எனின்,
அதுவன்று; வழக்குள்வழிய தம்முடிபு எனக் கொள்க.         (23)

எதிர்மறைக் கண்ணும் வேற்றுமை தம் பொருள்
திரியா எனல

 

109.

எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே.
 

என் - எனின், அவ்வேற்றுமைகள்  தம்  பொருள் மாறுபட நின்ற
வழியும், தம் பொருள் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஐ  முதலிய  ஐவகை  உருபிற்கும் செயப்படு  பொருள்
முதலாக  ஓதப்பட்ட  பொருண்மைகளை  எதிர் மறைபடச் சொல்லும்
தமக்குரிய     மரபாகிய    அப்பொருள்    நிலைமையில்   திரியா
அவ்வேற்றுமைச் சொற்கள் (எ - று.)

(எ - டு.) மரத்தைக் குறையான், சாத்தனொடு வாரான் எனவரும்,
பிறவும் அன்ன.                                        (24)


இந் நூற்பாவினை  நன்னூலார்   அப்படியே    கொண்டெடுது
‘மொழிந்துள்ளார் (நன் - பெயரியல் - 60)