சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

98

இனி,  அன்னபிறவும் என்றதனால் ஊரிற்சேயன் என்புழி, ஊர்க்குச்
சேயன்     என்றாயிற்று.    காட்டிற்கணியன்    என்பதும்    அது.
இவையெல்லாம் உருபும் பொருளும் உடன் மயங்கின   எனக்கொள்க.

மற்று    இம் மயக்கம் ‘அன்ன பிறவும்’ என்புழி அதிகாரத்தானே
அடங்காதோ   எனின்,   அஃது   ஒன்றனோடு   ஒன்று  பரிமாறும்
அதிகாரத்தது;   இஃது   ஒன்று   பலவற்றோடு  சென்று  மயங்ககும்
அதிகாரத்தது; ஆகலின் அதனுள் அடங்காது என்ப.           (27)

மற்றையுருபுகளும் தம்முள் மயங்குமெனல்
 

113.

ஏனை உருபும் அன்ன மரபின
1மானம் இலவே சொல்முறையான.
 

என் -   எனின், நான்காவ    தொழித்து   ஒழிந்த   வேற்றுமை
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நான்காவது   ஒழிந்த  உருபுகள் ஐந்தும்,  நான்காவது
போலப்  பல வேற்றுமைப் பொருட்கண்ணும் சென்று மயங்குமிடத்துக்
குற்றம் இல்லை.  அவ்வாறு   சொல்லிவரும்   வழக்குமுறைமைக்கண்,
(எ -று.)

வழக்கினுளவேல் கண்டுகொள்க என்பன  காணமையின்  காட்டா
மரபினவாம்.                                          (28)

வினைச் சொல்லிலக்கணம்
 

114.

வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற் கிதுபய னாக என்னும்
அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே.
 

என் - எனின், வினைச்சொல்லிலக்கணம் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)   தொழிலினையும்,  தொழில்     நிகழ்த்தும்  கருத்தா
வினையும்,  அவனால் செய்யப்படு பொருளினையும், அவன்  தொழில்
நிகழ்த்தற்கு இடமாகிய நிலத்தினையும், அதற்கு இனமாகிய


1 மானம்  -  குற்றம்  என்றே  உரை  கொண்டனர் அனைவரும்.
ஆனால், ‘ஆனம்’ என்ற சொல்லிற்கே குற்றம் என்ற பொருள் உண்டு
என்றும்,  எனவே  மானம் என்பது ‘ஆனம்’ என்றிருத்தல் வேண்டும்
என்றும் கூறுவர் திரு.பி.சா.சு.அவர்கள்.