சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

102

இதுவும்    ஆகுபெயர்க்கண்ணே     கிடந்ததோர்     இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  அவ்வாகுபெயர்களை ஐ முதலிய  ஆறு    வேற்றுமைப்
பொருண்மையிடத்தினும்    இயைபுடைமையைப்  பாதுகாத்து   அறியல்
வேண்டும் ஆசிரியன், (எ - று.)

(எ - டு.) பொற்றொடி  ஆகுபெயர்,  பொற்றொடியைத்  தொட்டான்:
பொற்றொடியை என இரண்டாவதன் பொருண்மைத்து.

தொல்காப்பியம்  என்பது   தொல்காப்பியனால்   செய்யப்பட்டதென
மூன்றாவதன் பொருண்மைத்து.

தண்டூண்   என்னும்  ஆகுபெயர்  தண்டூணாதற்குக்  கிடந்தது  என
நான்காவதன்பொருண்மைத்து.

பாவை   என்னும்   ஆகுபெயர்   பாவையினும்   அழகியாள்  என
ஐந்தாவதன் பொருண்மைத்து.

கடு   என்னும்  ஆகுபெயர்   கடுவினது   காய்  என  ஆறாவதன்
பொருண்மைத்து.

குழிப்பாடி என்னும்  ஆகுபெயர்  குழிப்பாடியுள்  தோன்றியது  என
ஏழாவதன் பொருண்மைத்து. பிறவும் அன்ன.

இதனாற்     சொல்லியது  முன்  ஒப்பில் வழியால் பிறிது  பொருள்
சுட்டலுமாம்  என்றமையின்  அப்பிறிது பொருள் சுட்டியவாறு  பாகுபாடு
பெறுங்கொல்லோ  எனின்,  இவ்வாறு வேற்றுமைப்பொருள்  உள்வழியே
பெயராவது ; பிறவழி யாகாது என்று கூறியவாறு.                (33)

அளவும் நிறையும் ஆகுபெயர் எனல்
 

119.அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உளவென மொழிப உணர்ந்திசி னோரே.
 

என் - எனின், இன்னொருசார் ஆகுபெயர் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.) அளவுப் பெயரினையும்  நிறைப்பெயரினையும் மேற்கூறிய
ஆகுபெயரோடு    கொள்ளுமிடங்கள்     உள   என்று   சொல்லுவர்
உணர்வுடையோர், (எ - று.)

(எ - டு.) நாழி  உழக்கு  என இவை  அளவுப்பெயர். ஈண்டு இதன்
பொருள் அதற்காயிற்றோ எனின்,  அளக்கப்பட்ட  பொருட்கண்  கிடந்த
வரையறைக்கண்  அப்பெயர்  பொருட்காயிற்று;   எனக்கொள்க.  தொடி,
துலாம் என்பன நிறைப்பெயர்: ஈண்டு வரையறைக் குணர்த்தினான் பெயர்
பொருட்காயிற்று என உணர்க.