திணை உணர்த்துவதோர் சொல்லின்மையிற் பால் எனவே திணையும் அடங்கும். இதுவும் அது 184. | 1அவற்றுள் நீ என் கிளவி ஒருமைக் குரித்தே ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. |
மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நீ என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமை விளக்குதற்கு உரித்து. நீயிர் என்னும் பெயர் பன்மை விளக்குதற்கு உரித்து, எ - று. எ - டு. நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்றவழிப், பால் விளங்காது ஒருமை பன்மை விளங்கியவாறு கண்டுகொள்க. அன்ன பிறவாற் கொள்ளப்படுவன: முதியான் என்பது பிராயம் பற்றி வரும். அது முதியான் வந்தது, முதியான் வந்தான் என வரும். சுமையான் என்பது தொழில்பற்றி வந்தது. சுமையான் வந்தது சுமையான் வந்தான் என வரும். பிறவுமன்ன. (34) ஒருவர் என்பது உயர் இருபாற்கும் பொது 185. | ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கு முரித்தே தெரியுங் காலை |
உயர்திணைப் பொருட்கண் விரவுப் பெயரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஒருவர் என்று சொல்லப்படுகின்ற பெயர்ச்சொல் உயர்திணைக்கண் ஆண்பாற்கும், பெண்பாற்கும் உரித்து ஆராயுங் காலத்து, எ - று. (35) ஒருவர் என்பது பன்மை வினைகொள்ளல் 186. | தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். |
மேலதற்கோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஒருவர் என்னும் பெயரின் தன்மையைக் கருதில், பன்மைவினை கோடற்குப் பொருந்தும், எ - று. எ - டு. ஒருவர் வந்தார். (36) நீயிர், நீ, ஒருவர் என்பவற்றின் பால் தெரியுமாறு 187. | இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல் |
1. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை உரை யாசிரியர்கள்.
|