சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

117

விளி ஏற்கும் பெயர்கள் சேய்மையில் அளபிறந்து ஒலிக்கும்
எனல்
 

155.உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
1அளபிறந் தனவே விரிக்குங் காலைச்
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான.
 

என்   -   எனின்,  மேற்கூறிய  மூவகைப்  பெயர்க்கும்  எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. 

(இ - ள்.) மேல் விளியேற்றற்குதியனவாக எடுத்தோதப்பட்ட எல்லாப்
பெயர்களும்  தத்தம்  மாத்திரையின்  மிக்கிசைக்கும் விளிக்குங் காலத்து;
யாண்டுமோ  எனின், அற்றன்று, சேய்மைக்கண் இசைக்கும்  வழக்கிடத்து,
(எ - று.)

(எ - டு.)நம்பீஇ, சாத்தாஅ எனவரும்.

வரையறை   இன்மையின் வேண்டியவாறு அளபெழும் எனக்கொள்க.
ஆயின்,   உயிர்    பன்னிரண்டு   மாத்திரையும்,  ஒற்றுப்  பதினொரு
மாத்திரையும் எனக் கொள்க.                                (35)

அம்மா என்னும் சொல் விளி ஏற்குமாறு
 

156.

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.
 

என் -  எனின்,  இதுவும்  விளித்திறத்தொடு படுவதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அம்ம   என்று    சொல்லப்படுகின்ற    அகர   வீற்று
அசைச்சொல்    ஆகாரமாகி    நீண்டு    நிற்றல்    அவ்விளியேற்கு
முறைமையையுடைய    பெயர்களோடு    பொருந்தாதாயினும்   பெயர்
விளிகளோடு   இதனையும்   ஓர்    விளிநிலைமைத்தாகக்   கொள்வர்
தெளிந்த அறிவினையுடையார், (எ - று.)

(எ - டு.)அம்மா கொற்றா எனவரும்.                     (36)

உயர்திணைப் பெயருள் விளி ஏலாதன
 

157.தநநு எஎன அவைமுத லாகித்
தன்மை குறித்த னளரவெ னிறுதியும்
 

1.‘அளவிறந்தனவே’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.