சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

127

அவைமுத லாகிய வகரப் பெயரும்
யாதுயா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த அஃறிணைப் பெயரே.
 

என்  -  எனின்,  நிறுத்த  முறையானே  அஃறிணைப்  பெயராமாறு
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  அது,  இது,  உது என்று சொல்லப்படுகின்ற சுட்டு முதற்
பெயர்களும்,  சுட்டெழுத்தினை  முதலாகயுடைய அஃது,  இஃது,  உஃது
என்னும்  ஆறு  தொடர்மொழிக்  குற்றியலுகரப்  பெயர்களும்,  அவை,
இவை, உவை என்று  சொல்ல  வருகின்ற சுட்டுமுதற் பெயர்களும், அச்
சுட்டெழுத்தினை  முதலாகவுடைய   அவ்,   உவ்,   இவ் என்னும் வகர
வீற்றப்  பெயர்களும்,  யாது  யா,  யாவை  என்று  சொல்ல  வருகின்ற
அவ்வினாப்   பொருளிடத்து   வரும்  மூன்று   பெயருமாக   வரூஉம்
பதினைந்து   பெயர்களும்,    ஒருமை    பன்மைப்பால்    அறியவந்த
அஃறிணைப் பெயராம், (எ - று.)                             (13)

இதுவுமது
 

171.பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள்பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன.
 

என்  -   எனின்,  இதுவும்  அஃறிணை  யொருசார்ப்  பெயர்களை
நுதலிற்று.

(இ - ள்.)  பல்ல  பல  சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும்,
உள்ள  இல்ல  என்னும்  பெயர்களும்,   உண்டது   உண்டன என்றாற்
போலவரும்    வினைப்பெயர்களும்,     கரியது    கரியன   என்றாற்
போலவரும்  பண்பினைக் கொண்ட  பெயர்ச்சொற்களும்,  ஒன்று  பத்து
நூறு  ஆயிரம்   என்றாற்போலச்   சொல்லப்படுகின்ற இத் துணையென
வரையறை உணர்த்தும் எண்ணுக்குறிப்பாற் பெற்ற