சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

128

பெயர்ச்  சொற்களும்,  பொன்னன்னது  பொன்னன்ன  என்றாற்  போல
உவமத்தினாற்    பெற்ற    பெயர்ச்    சொற்களும்,    உட்பட   அக்
கூறறொன்பதும் மேற்கூறிய பெயர்போலப்  பாலறிய வரும்  அஃறிணைப்
பெயர்களாம், (எ - று.)

அஃறிணை இயற்பெயர்
 

172.கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சொற்கே.
 

என்   -    எனின்,    இதுவும்    பாலறிய   வரும்   அஃறிணை
யொருசார்ப்பெயர்களையுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  கள்    என்னும்     வாய்பாட்டோடு      பொருந்தும்
அவ்வஃறிணையியற்  பெயர்கள்  பலவறி   சொல்லாதற்குக்  கொள்ளும்
இடமுடைய, (எ - று.)

கள்ளொடு   சிவணின் இயற்பெயர் பலவறி சொல்லாகக் கொள்ளுமிட
முடைய  எனவே, கள்ளொடு சிவணாத பெயர்கள் பலவறி  சொல்லாகக்
கொள்ளப்படாத  ;  ஒருமைக்கும்   பன்மைக்கும்   பொதுவாய்  நிற்கும்
என்றவாறு.

(எ - டு.) நாய்கள், ஆக்கள் எனப் பன்மை யுணர  நின்றன ;  நாய்
ஆ  எனக்  கள்ளொடு  சிவணாமையிற்  பொதுவாய்  நின்றன   எனக்
கொள்க.                                                 (15)

அஃறிணைப் பெயர்க்குப் புறனடை
 

173.அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.
 

என்  -   எனின்,   இஃது   அஃறிணைப்   பெயர்க்குப்  புறனடை
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)   அத்தன்மையன    பிறவுமாகிய    அஃறிணையிடத்துப்
பன்மையும்   ஒருமையுமாகிய   பால்களை   அறிய   வந்த   எல்லாப்
பெயர்களும் அவ்வஃறிணைக்குரிய பெயர்களாம், (எ - று.)

(எ - டு.) ஆ, நாய், கழுதை,  ஒட்டகம், புலி,  புல்வாய்  எனச் சாதி
பற்றி  வருவன  வெல்லாங்  கொள்க.   நிலம், நீர், தீ, வளி,  ஆகாயம்
என்பன  அவற்றின்பாற்படும்.  உண்டல், தின்றல்  எனப்  பால்காட்டாத
தொழிற்  பெயரும்,   கருமை செம்மை யெனப்  பால்காட்டாத  பண்புப்